Posts

கோவில் 1020 - கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1020 வரங்களை அள்ளி வழங்கும் கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில் 24.3.2024 ஞாயிறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இளங்குந்தபுழா [Elankunnpuzha]-682503 எர்ணாகுளம் மாவட்டம் [Ernakulam District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: ஏர்ணாகுளம் 14 கிமீ தொலைபேசி எண்: 0484-2369007, 2369196 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எர்ணாகுளம் மாநகரிலிருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் இளங்குந்தபுழா பகுதியில் வரங்களை அள்ளி வழங்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொச்சி நகருக்கருகில் இருக்கும் இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலை கேரளாவின் திருச்செந்தூர் கோவில் என்றழைக்கின்றனர். இக்கோவிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோவிலின் பழைய மூலவர் சுப்பிரமணிய சுவாமியே என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர். இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தல வரலாறு: கோவிலில் வழ...

கோவில் 1019 - ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1019 சங்கடங்கள் தீர்க்கும் ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில் 23.3.2024 சனி அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் [TM012459] சின்னப்புலியூர்-638455 பவானி வட்டம் ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: பவானி 8 கிமீ மூலவர்: முத்துக்குமார சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தல மகிமை: ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பவானி நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் சின்னப்புலியூர் கிராமத்தில் சங்கடங்கள் தீர்க்கும் முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தல வரலாறு: இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோவில் மிகவும் தொன்மையானது. தல அமைப்பு: அழகிய இக்கோவிலின் கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். வேல் ஒன்றும் உள்ளது. இக்கோவிலில் மூலவர் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட தெய்வங்கள...

கோவில் 1018 - நாமக்கல் பிள்ளாநல்லூர் செட்டிக்குமார சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1018 பிள்ளாநல்லூர் வேண்டும் வரம் தரும் நாமக்கல் பிள்ளாநல்லூர் செட்டிக்குமார சுவாமி கோவில் 22.3.2024 வியாழன் அருள்மிகு செட்டிக்குமார சுவாமி திருக்கோவில் [TM009246] பிள்ளாநல்லூர்-637403 ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: ராசிபுரம் 8 கிமீ, குருசாமிபாளையம் 2 கிமீ மூலவர்: செட்டிக்குமார சுவாமி உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தல மகிமை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் பிள்ளாநல்லூர் கிராமத்தில் வேண்டும் வரம் தரும் செட்டிக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான் செட்டிக்குமார சுவாமியாக அருளாட்சி செய்கின்றார். பிள்ளாநல்லூர் செட்டிக்குமார சுவாமி கோவிலுக்கருகில் (2 கிமீ) இருக்கும் குருசாமிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் இருப்பது சிறப்பு [முருகன் ஆலயம் எண்: 159]. இக்கோவிலில் செட்டிக்குமார சுவாமி விசேஷ நாட்களில் ராஜ அலங்காரத்தில் திருக்காட்சி அருள்வது கண் கொள்ளா காட்சி. முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி வ...

கோவில் 1017 - சேலம் கீரிப்பட்டி பழனியாண்டவர் கோவில்

Image
🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1017 ஞானம் மேம்பட அருளும் சேலம் கீரிப்பட்டி பழனியாண்டவர் கோவில் 21.3.2024 வியாழன் அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM008850] கீரிப்பட்டி-636107 ஆத்தூர் வட்டம் சேலம் மாவட்டம் இருப்பிடம்: சேலம் 60 கிமீ, ஆத்தூர் 17 கிமீ, வாழப்பாடி 22 கிமீ மூலவர்: பழனியாண்டவர் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தல மகிமை: சேலம் மாவட்டம் சேலம் மாநகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கீரிப்பட்டி என்னும் கிராமத்தில் ஞானம் மேம்பட அருளும் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. ஆத்தூர் வட்டத்தில் உள்ள கீரிப்பட்டி பழனியாண்டவர் கோவில், ஆத்தூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும், வாழப்பாடியிலிருந்து 22 கிமீ தொலைவிலும் இருக்கிறது. மிகவும் சக்தியுடைய இந்த பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட இதர முருகப்பெருமான் விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தல வரலாறு: மிகவும் பழமையான இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. தல அமைப்பு: இக்கோவில் கருவறையில் மூலவர் பழனியாண்டவர் கையில் தண்டத்துடன் திருக்காட...

கோவில் 1016 - நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1016 பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் கோவில் 20.3.2024 புதன் அருள்மிகு முருகன் திருக்கோவில் காந்தள் ஊட்டி-643006 [உதகமண்டலம்] நீலகிரி மாவட்டம் இருப்பிடம்: ஊட்டி 3 கிமீ மூலவர்: முருகன் தல மகிமை: நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தள் பகுதியில் பிணிகள் போக்கிடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் வீற்றிருக்கும் காந்தள் முருகனை அபூர்வ தியான முருகன் என்றும் அழைக்கப்படுகின்றார். நவக்கிரகங்களுக்கு மத்தியில் சிவலிங்கம், தியான கோலத்தில் முருகப்பெருமான் அருளும் இந்தக் கோவில், பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் தலமாகத் திகழ்கிறது. தோடர்கள் வாழ்ந்த இந்த பகுதி ஆங்கிலேயரின் வருகைக்கு முன் ‘கந்தேல் மந்து’ என்று அழைக்கப்பட்டு வந்தது. மந்து என்றால் தோடர்கள் அதிகம் வாழும் பகுதி என்று பொருள். சித்தர் வடிவில் முருகப்பெருமான் சிவ பூஜை செய்த தலம் என்றும், சித்தர்கள் தவம் செய்த பூமி என்று சிறப்பாக குறிப்பிடுகின்றார். சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் போகர், பாம்பா...

கோவில் 1015 - ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1015 தீவினைகள் அகற்றும் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில் 19.3.2024 செவ்வாய் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் பாப்பாத்திக்காடு II முனிசிபல் காலனி ஈரோடு-638004 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 2 கிமீ மூலவர்: பாலமுருகன் தல மகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருந்து அருள் புரியும் பாலமுருகனை வழிபடுவோருக்கு தீவினைகள் அகலும். ஐஸ்வர்யங்கள் பெருகும். ஞானம் பெருகும். தொழில் மேம்படும். இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஜூலை 2022-ல் நடைபெற்றது. நகரின் மத்தியில் இருக்கும் இந்த பாலமுருகன் கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தல வரலாறு: ஈரோடு நகர் வாழ் பக்தர்களால் இக்கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் 6.7.2022-ல் சிறப்பாக நடைபெற்றது. தல அமைப்பு: இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் இளையோனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் செல்வகணபதி, ...

கோவில் 1014 - ஈரோடு பாசூர் காந்தமலை பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1014 கோரிக்கைககளை நிறைவேற்றும் ஈரோடு பாசூர் காந்தமலை பாலமுருகன் கோவில் 18.3.2024 திங்கள் அருள்மிகு காந்தமலை பாலமுருகன் திருக்கோவில் பாசூர்-638154 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 24 கிமீ மூலவர்: பாலமுருகன் தல மகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து ஈரோடு-கரூர் சாலையில் 22 கிமீ தொலைவில் இருக்கும் சோளங்காபாளையத்தில் இறங்கி, கிழக்கு திசையில் மேலும் 2 கிமீ பிராயணித்தால் வரும் பாசூர் கிராமத்தில் உள்ள காந்தமலை எனும் சிறு குன்றில் கோரிக்கைககளை நிறைவேற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் பாலமுருகனுடன், சிவபெருமான், பெருமாள், பிரம்மா மூவரும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்வதால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்றும் சிறப்பு பெயர் பெற்றது. சித்தர் வாழ்ந்த தலம் எனும் பெருமை பெற்றது. இக்கோவில் பாலமுருகனை வழிபடுவோருக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெறும், குழைந்தை பாக்கியம் கிடைக்கும் இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. கோரிக்கை நி...