Posts

கோவில் 49 - கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-49 நினைத்ததை நிறைவேற்றும் கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.7.2021 செவ்வாய் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில் தோவாளை-629302 கன்யாகுமரி மாவட்டம் இருப்பிடம்: நாகர்கோவில் 14 கிமீ, கன்யாகுமரி 23 கிமீ, ஆரல்வாய்மொழி 4 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) பழமை: 500 ஆண்டுகள் புராணப்பெயர்: எதிர்வில்லி சோழபுரம் தலமகிமை: கன்யாகுமரி மாவட்டத்தில் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 14 கிமீ தொலைவில் முருகனுக்கு பிடித்தமான மிகப் பெரிய அளவில் மலர்கள் சந்தை அமைந்துள்ள தோவாளை எனும் ஊரில் உள்ள குன்று ஒன்றில் முருகப்பெருமான் குடிகொண்ட சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. மருமகன் சுப்பிரமணிய சுவாமியாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரியும் தலம் என்ற சிறப்புப்பெற்றது.. சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, திருவிழாவின் போது மூலவர் சுப்பிரமணிய சுவாமி முதல் நாள் பாலமுருகன் வடிவத்தி...

கோவில் 414 - திருச்செந்தூர் திருப்புகழ் சித்ரசபை குளக்கரை செந்திலாண்டவர் கோவில்

   🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-414 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் திருச்செந்தூர் திருப்புகழ் சித்ரசபை குளக்கரை செந்திலாண்டவர் கோவில் 27.7.2022 புதன்                                       அருள்மிகு குளக்கரை செந்திலாண்டவர் திருக்கோவில் தெப்பகுளம் தெரு திருச்செந்தூர்-628215 இருப்பிடம்: திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து3 கிமீ   மூலவர்: குளக்கரை செந்திலாண்டவர் தேவியர்: வள்ளி, தெய்வானை   தலமகிமை: பெருமை மிக்க திருச்செந்தூர் தலத்தில், திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் குளக்கரை திருப்புகழ் சித்ரசபை சார்பில் குளக்கரை செந்திலாண்டவர் கோவில் திருப்பணிகள் ஆரம்பித்து செவ்வனே நடந்து முடியும் தறுவாயில் இருப்பது செந்தூர் செந்திலாண்டவரின் அருளால்,சிறப்பம்சாகும்.   இந்த சபையின் ஆனி மாதத்தில் வரும் குமார சஷ்டி பெருவிழாவினை உலகெங்கும் உள்...

கோவில் 48 - வேலூர் ஞானமலை ஞானபண்டிதன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-48  [திருப்புகழ் தலம்] வாழ்வில் மங்களம் பெருக அருளும் முருகனின் பாத சுவடுகள் பதிந்த வேலூர்  ஞானமலை ஞானபண்டிதன் கோவில் 26.7.2021 திங்கள் அருள்மிகு ஞானபண்டிதன் திருக்கோவில் திருப்புகழ் தலம் ஞானமலை வேலூர் மாவட்டம் இருப்பிடம்: செல்: 9442140830 மூலவர்: ஞானபண்டிதன் தேவியர்: ஞானகுஞ்சரி, ஞானவல்லி பாடியவர்: அருணகிரிநாதர் (2) வேறு பெயர்: கோவிந்தச்சேரி தலமகிமை: ஞானகுருவாகி நல்லருள் புரியும் ஞானமலை ஞானபண்டிதன் கோவில் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது. முருகப் பெருமானின் பாதச்சுவடுகள் அமைந்த தலம்தான் ஞானமலை முருகன் கோவில். ஞான மூர்த்தியாக முருகப்பெருமான் குடிகொண்ட பழமையான கோவில் ஞான குருவாகக் காட்சிதரும் முருகப்பெருமானை தரிசித்தால் மாயைகள் அனைத்தும் விலகி வாழ்வில் மங்களம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ‘குறமகள் தழுவிய குமரன்’ திருக்கோலத்தை தரிசித்தால் தம்பதிகளுக்குள் உருவான சிக்கல்கள் அனைத்தும் விலகிவிடு...

கோவில் 413 - கேரளா கொல்லம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-413 தோஷங்கள் நீக்கும் கேரளா கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் 26.7.2022 செவ்வாய் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உமையநல்லூர்-691589 மையநாடு கொல்லம் மாவட்டம் கேரளா மாநிலம் இருப்பிடம்: கொல்லத்திலிருந்து 10 கிமீ மூலவர்: பாலசுப்ரமணிய சுவாமி, உமையன் தலமகிமை: கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் பழமையான, புனிதம் நிறைந்த உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மையநாடு அருகில் உள்ளது. மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி ஆவார். உமையன் என்றும் அழைக்கிப்படுகிறார். உமையன் இருக்குமிடம் என்பதால் உமையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. மார்ச் (பங்குனி) மஹோற்சவத்தின் (8 நாள்) போது யானை வால் பிடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு கேரளா முழுவதிலும் இருந்து முருக பக்தர்கள் வருகின்றனர். இது முருகர், விநாயகர் வரலாற்றை நினவுபடுத்துகிறது. குதிரை எடுப்பு என்ற விழாவும் பிரபலம். தைப்பூயம் (தைப்பூசம்) திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலில் வழிபடப்படும் தேவ...

கோவில் 47 - ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-47 செவ்வாய் தோஷம் நீங்கும் ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 25.7.2021 ஞாயிறு அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் எல்க் மலை ஊட்டி-639006 இருப்பிடம்: ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி சிவன் நாமம்: ஜலகண்டேஸ்வரர் அம்மன்: ஜலகண்டேஸ்வரி தல விருட்சம்: செண்பக மரம் தீர்த்தம்: நீலநாரயண தீர்த்தம் புராணப்பெயர்: மான் குன்றம் தலமகிமை: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் எல்க் மலை எனும் இடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோவில். மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இந்த குன்று எல்க் ஹில் அல்லது எல்க் மலை என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோவிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது. மேலும் இத்தலம் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும் ...

கோவில் 412 - திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-412 குறைகளை களையும் கேரளாவின் பழனி என சிறப்பு பெற்ற திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் 25.7.2022 திங்கள் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் எருதாவூர் பாலராமபுரம்-695507 திருவனந்தபுரம் கேரளா மாநிலம் இருப்பிடம்: திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ, பாலராமபுரம் 2 கிமீ மூலவர்: பாலசுப்ரமணிய சுவாமி தலமகிமை: கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் எரித்தாவூர் உள்ளது. ஏராளமான எருமைகளைக் கொண்ட ஊர் ஆதலால் எரித்தாவூர் என்று பெயர் வந்தது. இங்குள்ள குன்றின் மீது பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இகோவிலில் முருகப்பெருமான் கௌபீனத்துடன் காட்சியருள்வது பழநி முருகனைப் போலவே இருப்பதால், இத்தலம் கேரளத்து பழனி என்று அழைக்கப்படுவது சிறப்பம்சம். அதிக அளவில் மயில்கள் இத்தலத்திற்கு அழகையும், முருகனுக்கு பெருமையையும் சேர்க்கின்றன. கேரளா, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வேண்டுவோருக்கு பாலமுருகன் குறைகள் அகலவும், பிணிகள் தீரவும் அருள்கின்றார். தைப்பூசம் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்...

கோவில் 46 - கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-46 வளமான வாழ்வு அமைய அருளும் கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் கோவில் 24.7.2021 சனி அருள்மிகு வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில் கரூர்-639006 இருப்பிடம்: கரூரிலிருந்து 5 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணியர் தீர்த்தம்: காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தம் தலமகிமை: கரூரிலிருந்து வெங்கமேடு வழியாக ப.வேலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தம் உள்ள திருத்தலம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் கோவில். சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோவிலை கருவூர் அரசர் அமைத்தார் என சொல்லப்படுகிறது. மலையடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் 5 தினங்கள் நீராடி முருகனை மனமுருக வழிபட்டால் பிள்ளை வரம் கிடைக்கும். சகல தோஷங்கள் நீங்கும். இறைவனை வழிபட காரணமாக இருக்கும் படிக்கட்டுகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழா 10 நாட்கள் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தேரோட்டம் என வெகு விமரிசையாக கொண...