கோவில் 1917 - விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1917

நல்லன அருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

7.09.2026 திங்கள்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023104]

வடகரைத்தாழனூர் 605752

கண்டாச்சிபுரம் வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: திருக்கோவிலூர் 8 கிமீ, கண்டாச்சிபுரம் 18 கிமீ, விழுப்புரம் 35 கிமீ, திருவண்ணாமலை 41 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரைத்தாழனூர் கிராமத்தில் நல்லன அருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் மற்றும். பங்குனி உத்திரத் திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு :

விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவான கோபுரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அழகுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

நல்லன அருள, வேண்டும் வரம் நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் போக்க, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நேர்மறை சிந்தனைகள் உருவாக, மன மகிழ்ச்சி பொங்க, கல்வி, ஞானம் மேம்பட செல்வம் பெருக, தொழில் சிறக்க, கஷ்டங்கள் விலக, தோஷங்கள் விலகிட


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டும் வரம் தந்தருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி கும்பிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1917 நல்லன அருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1917 வேண்டும் வரம் தந்தருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்






Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்