கோவில் 1910 - விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1910

நல்லன அருளும் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

31.08.2026 திங்கள்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023093]

மணம்பூண்டி 605701

கண்டாச்சிபுரம் வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: திருக்கோவிலூர் 4 கிமீ, கண்டாச்சிபுரம் 14 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 26 கிமீ, திருவண்ணாமலை 34 கிமீ, விழுப்புரம் 63 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி கிராமத்தில் நல்லன அருளும் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது 30 கிமீ திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது மாவட்டத் தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி அருள்கின்றார்.


விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா அன்று விசேஷ பூஜைகள் நடக்கின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு :

விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

நல்லன அருள, வேண்டியதை பெற, வினைகள் தீர, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் நலன் சீராக, மன மகிழ்ச்சி கிட்ட, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, தீயவை அகல, தொழில் மேம்பட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டியதை தந்தருளும் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1910 நல்லன அருளும் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்  (HRCE Photo)


படம் 2 - 1910 வேண்டியதை தந்தருளும் விழுப்புரம் மணம்பூண்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் (HRCE Photo)

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்