கோவில் 1905 - விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1905
விருப்பங்களை நிறைவேற்றும் விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் கோவில்
26.08.2026 புதன்
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் [TM022982}
மேல்காரணை 605202
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 22 கிமீ, விக்கிரவாண்டி 22 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 38 கிமீ, திண்டிவனம் 39 கிமீ, திருக்கோவிலூர் 42 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் மேல்காரணை கிராமத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் 24.06.2005 அன்று நடைபெற்றது.
மாவட்டத் தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
பழமையான விழுப்புரம் மாவட்டம் மேல்காரணை சுப்பிரமணியர் கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை தற்போது நிர்வகித்து வருகிறது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் இந்து அறநிலையத் துறை தரவுகளின் படி 24.06.2005 அன்று நடைபெற்றது.
தல அமைப்பு :
விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
விருப்பங்களை நிறைவேற, நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, நல்லன அருள, இரு வினைகள் நீங்க, சகல பிணிகள் தீர, திருமணத்தடை அகல, குழந்தை செல்வம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோயற்ற வாழ்வு தர, நல்லன அருள, மன அமைதி உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க அருளும் விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியரை மனமுருக கும்பிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1905 விருப்பங்களை நிறைவேற்றும் விழுப்புரம் மேல்காரணை சுப்பிரமணியர்
Comments
Post a Comment