கோவில் 1383 - சேலம் தலைவாசல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1383
கேட்டதை கொடுத்தருளும் சேலம் தலைவாசல் முருகன் கோவில்
22.03.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
[அ/மி முருகன் & அம்மன் திருக்கோவில்]
தலைவாசல் 636112
ஆத்தூர் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 75 கிமீ, தலைவாசல் 6 கிமீ, ஆத்தூர் 20 கிமீ, கெங்கவல்லி 25 கிமீ, கள்ளக்குறிச்சி 30 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 32 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 36 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 75 கிமீ தொலைவில் இருக்கும் தலைவாசல் பகுதியில் கேட்டதை கொடுத்தருளும் சேலம் தலைவாசல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் தலைவாசல் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது தலைவாசல் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது கெங்கவல்லி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற ஏத்தாப்பூர் முருகன் கோவிலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் தலைவாசல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆற்றலுடன் அருளாட்சி புரிகின்றார். இக்கோவிலுக்கு அருகிலேயே சிறப்பு மிக்க அம்மன் கோவில் அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
சேலம் தலைவாசல் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்கள் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சேலம் தலைவாசல் முருகன் கோவில் கட்டப்பட்டது உள்ளூர் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களால் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு:
சேலம் தலைவாசல் முருகன் கோவில் கருவறையில் முருகன் சிறிய மூர்த்தமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்டதை கொடுத்தருள, மன மகிழ்ச்சி கிடைக்க, வினைகள் தீர, பிணிகள் அகல, குழ்ந்தை வேண்டி, துன்பங்கள் நீங்க, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நல்லன நடைபெற, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தரும் சேலம் தலைவாசல் முருகன் திருவடி பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1383 கேட்டதை கொடுத்தருளும் சேலம் தலைவாசல் முருகன் கோவில்
படம் 2 - 1383 மன மகிழ்ச்சி தரும் சேலம் தலைவாசல் முருகன் கோவில்
Comments
Post a Comment