கோவில் 1041 - அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1041
நல்லன அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
14.4.2024 ஞாயிறு
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
காட்டுபிரிங்கியம்-621704
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: அரியலூர் 8 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி
தல மகிமை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தலைநகரம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள காட்டுபிரிங்கியம் எனும் ஊரில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. 22.8.2022-ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.
தல வரலாறு:
இக்கோவில் மகா கும்பாபிஷேகம் 22.8.2022-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலின் மதில் சுவர் மேல் அழகிய தெய்வ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக கையில் தண்டத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், வள்ளி, தெய்வானை, சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நல்லன அருள, எண்ணியது நடக்க, கல்வி, ஞானம், தொழி சிறக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணியது நடக்க அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருவடிகள் பணிந்து பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment