கோவில் 752 - சென்னை M G R நகர் திருச்செந்தூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-752
சொந்தமாக வீடு வாங்க அருளும் சென்னை M G R நகர் திருச்செந்தூர் முருகன் கோவில்
30.6.2023 வெள்ளி
அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோவில் திருக்கோவில்
M G R நகர்
நெசப்பாக்கம்
சென்னை-600078
இருப்பிடம்: கோயம்பேடு 6 கிமீ, சென்னை சென்ட்ரல் 12 கிமீ,
அலைபேசி: 9841238612
மூலவர்: திருச்செந்தூர் முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: அரசமரம்
தலமகிமை:
சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள M G R நகரில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் திருச்செந்தூர் முருகன் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து 12 கிமீ பயணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இத்தலத்து முருகப்பெருமான், திருச்செந்தூர் தலத்து முருகனைப் போலவே அருள்புரிவதால், இம்மூலவருக்கு திருச்செந்தூர் முருகன் என்ற திருப்பெயர் வந்தது.
இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹார நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. கிருத்திகையன்று விசேஷ வழிபாடு நடக்கின்றது. திருக்கார்த்திகை திருநாள் தீப ஒளியுடன் கொண்டாடப்படுகிறது. இதர திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
இப்பகுதி புரவலர்கள் மற்றும் பக்தர்களால் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
இத்திருக்கோவிலின் ராஜகோபுரம் 3 நிலைகளுடனும் 5 கலசங்களுடனும் அழகிய ஆறுபடை வீடு சுதை சிற்பங்களுடன் காட்சி அளிக்கின்றது. கோவிலின் கன்னி மூலையில் வலம்புரி விநாயகர் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருளுகின்றார். கோஷ்டத்தில் தெற்கு நோக்கி பார்வதி தேவியும், மேற்கு நோக்கி மகாலட்சுமியும், வடக்கு நோக்கி சரஸ்வதி தேவியும் அருளுகின்றனர். அருகில் உற்சவமூர்த்திகள் தனி சந்ந்தியில் உள்ளனர். பிரதானமாக முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்வது அழகு. திருக்கோவில் கருவறையில் மூலவராக திருச்செந்தூர் முருகன் திருநீற்று அலங்காரத்தில் வேல், சேவற் கொடி தாங்கி புன்னகை தவழ காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் முன் சிறிய கொடிமரம், சக்தி வேல் உள்ளன. அருகில் காந்திமதி சமேத நெல்லையப்பர் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை அருளுகின்றனர். அபிராமி அம்மாள் தெற்கு நோக்கி அருளுகின்றார். அருகில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். வடகிழக்கில் நவக்கிரகங்கள் அருளுகின்றனர். ஈசான்ய மூலையில் கால பைரவர் அருள்கின்றார். ஐயப்பன் 18 படிகளுடன் தனி சந்நிதியில் அருளுகின்றார். தென் திசையில் சாய்பாபா அருள்கின்றார். அரசமரத்தடியில் விநாயகர் அருள்கின்றார். அருகில் ராகு, கேது தோஷங்களை போக்குகின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
சொந்தமாக வீடு வாங்க, தடைகளை தகர்க்க, குழந்தைவரம் வேண்டி, தொழில் மேம்பட, வேண்டும் வரம் கிடைக்க, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, கண் திருஷ்டி அகல, தொழில் பிரச்னைகள் அகல, தோஷங்கள் அகல, காரியங்கள் வெற்றியடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8.30
தடைகளை தகர்க்கும் சென்னை M G R நகர் திருச்செந்தூர் முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 752 சொந்தமாக வீடு வாங்க அருளும் சென்னை MGR நகர் திருச்செந்தூர் முருகன்
படம் 2 - 752 தடைகளை தகர்க்கும் சென்னை M G R நகர் திருச்செந்தூர் முருகன் கோவில்
Comments
Post a Comment