கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1602

சத்ரு சம்ஹாரம் புரியும் மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்

27.10.2025 திங்கள்


அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோவில்

11, Jalan, Dato Esa

தம்போய் [Tampoi 81200]

ஜோகூர் பாரு [Johor Bahru]

ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 321 கிமீ, தம்போய் 2 கிமீ, பெர்லிங் 7 கிமீ, ஸ்கூடாய் 8 கிமீ, ஜோகூர் பாரு [Larkin Sentral BST] 10 கிமீ, மூவார் [Muar] 162 கிமீ, மலாக்கா [Malacca] 207 கிமீ


மூலவர்: சுப்ரமணியர்

உற்சவர்: சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor ] மாநிலத்தில் இருக்கும் தம்போய் நகரில் [Tampoi 81200] 11, Jalan, Dato Esa பகுதியில் சிறப்பு மிக்க தம்போய் சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 321 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 162 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 207 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தம்போய் சுப்ரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்ரமணியர் மூலவராக கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3-வது கும்பாபிஷேகம் 11.11.2022 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.


மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் சுவாமிக்கு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. தைப்பூசத் திருநாளன்று (10-ம் நாள்) அதிக அளவில் பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுப்ரமணியரை வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். அன்றைய திருநாளில் பாலாபிஷேகம், சங்காபிஷேகம், அன்னதானம் நடைபெறுகின்றன. சுவாமி தேவியரோடு திரு உலா வந்து பக்தர்களி உய்விக்கின்றனர். கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் நடைபெறுகின்றது. தினசரி சிறப்புப் பூஜைகள், 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம், 7-ம் நாள் சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் என விமரிசையாக கந்த சஷ்டி விழா நடைபெறிகிறது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் விசேஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுவாமி சிவானந்த மூர்த்தி குரு பூஜை ஆண்டு தோறும் ஜூலை மாதம் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகிறது.


தல வரலாறு:

1930-ம் ஆண்டு சிவத்திரு சங்கரன்-லெட்சுமி அவர்கள் ஒரு சிறிய குடிசையில் சுப்ரமணியர் சிலையை வைத்து கோவில் அமைத்துள்ளனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதால், அதிகளவில் பக்தர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடத்தப்படும். பின்னர் திரு. வேலு அச்சுதன் அவர்கள் பெருகி வரும் பக்தர்களுக்கு ஏற்ப தம்போய் சுப்ரமணியர் கோவிலைக் கட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். 1978-ம் ஆண்டு, இந்த கோவிலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர். பிறகு திரு. ராமலிங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களின் உதவியோடு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை அமைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர். சமீபத்தில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3-வது கும்பாபிஷேகம் 11.11.2022 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதியில் தம்போய் சுப்ரமணியர் திருக்கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.


தல அமைப்பு:

மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அழகுற காட்சியளிக்கின்றது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இக்கோவில் கருவறையில் மூலவர் சுப்ரமணியர் கைகளில் வேல் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்க்கை, பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன், அம்மன், முனீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், பிரதோஷம், அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, பௌர்ணமி, மாசி மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி, திருவோணம், அனுமன் ஜெயந்தி, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி, சுவாமி சிவானந்த மூர்த்தி குரு பூஜை


பிரார்த்தனை:

சத்ரு சம்ஹாரம் புரிய, நினைத்தது நிறைவேற, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, மன அமைதி உண்டாக, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை வரம் வேண்டி, திருமண பாக்கியம் அருள, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்

காலை 7-12 மாலை 7-9.30


நினைத்ததை நிறைவேற்றும் மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1602 சத்ரு சம்ஹாரம் புரியும் மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர்


படம் 2 - 1602 நினைத்ததை நிறைவேற்றும் மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்