Posts

Showing posts from July, 2022

கோவில் 419 - கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில்

Image
🙏 🙏  தினம் ஒரு முருகன் ஆலயம்-419 வாழ்க்கையை வளமாக்கும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில் 1.8.2022 திங்கள் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கண்ணம்பாளையம்-641402 கோயம்புத்தூர் இருப்பிடம்: பாப்பம்பட்டி பிரிவிலிருந்து 3 கிமீ, காந்திபுரம் 19 கிமீ மூலவர் தண்டாயுதபாணி சுவாமி தீர்த்தம்: சரவண தீர்த்தம் தலமகிமை: கோவை–திருச்சி நெடுஞ்சாலையில், அர்த்தமண்டபத்தில் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து 3 கிமீ தொலைவில் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து 65, 65 A எண் பேருந்தில் 19 கிமீ தூரம் பயணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இக்கோவில் கோவை பழனி என்றும், கண்ணம்பாளையம் பழனியாண்டவ்ர் கோவில் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதி போலவே முனைவர் சென்னியப்பர் கண்ணம்பாளையம் பழனியாண்டவர் அனுபூதி இயற்றியுள்ளார். 27 படிகள் ஏறினால் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடையலாம். 27 படிகள் 27 நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் நட்சத்திரங்களின் படி காலை 10 மணி அளவில் நடைபெ...

கோவில் 53 - கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-53 சைவர் வைணவர் பேதமின்றி வணங்கும் கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.7.2021 சனி அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் காட்டினாயனப்பள்ளி-635001 கிருஷ்ணகிரி மாவட்டம் இருப்பிடம்: கிருஷ்ணகிரியிலிருந்து 5 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: திருக்குளம் தலமகிமை: கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து 5 கிமீ தொலைவில் காட்டினாயனப்பள்ளி என்ற இடத்தில் சைவர் வைணவர் பேதமின்றி வணங்கும் ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானும், ஆஞ்சநேயரும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்வதால், முருகப்பெருமானுக்கு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்படுகிறார். ஆடிக்கிருத்திகை பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருவிழா 14 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி, பால் குடம் எடுத்து முருகனின் அருளை பெற்று செல்கின்றனர். விசேஷ தினங்களில் முருகன் மயில் வாகன உலா வருகிறார். தல வரலாறு: இந்தத் தலத்தில் பல வருடங்கள் முன் பக...

கோவில் 418 - கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-418 புத்துணர்ச்சி தந்தருளும் கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.7.2022 ஞாயிறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கொடும்தாரா-689645 பத்தனம்திட்டா கேரளா மாநிலம் இருப்பிடம்: பத்தனம்திட்டாவிலிருந்து 2 கிமீ மூலவர் சுப்பிரமணிய சுவாமி தலமகிமை: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து 2.5 கிமீ தொலைவில் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில் என்ற பிரபலமான ஆலயம் உள்ளது. இதன் கூம்பு வடிவ கூரை, வட்ட வடிவ கருவறை என பாரம்பரிய கட்டிடக்கலைகள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் தனது மௌன விரதத்தின் போது இந்தக் கோவிலுக்குச் சென்றதாகவும், யோக துறவியான சக்திபத்ராவை சந்தித்ததாகவும் நம்பப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் வேலாயுதரின் அருளைப் பெறுவதற்காக தொலைதூரங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஆற்றின் இருப்பு புத்துணர்ச்சியை அளிக்கிறது மற்றும் அனைவரையும் பாதுகாக்கிறது. தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் காவடி சுமத்தல், அலகு குத்துதல் பல்வேறு என விஷு தி...

கோவில் 52 - வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-52 தேக பலம் அருளும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் 30.7.2021 வெள்ளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (கோடை ஆண்டவர்) திருக்கோவில் வல்லக்கோட்டை-602105 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: ஒரகடம் கூட்டு ரோட்டிலிருந்து 4 கிமீ, ஸ்ரீபெரும்புதூர்12 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (கோடை ஆண்டவர்) தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பாதிரி மரம் தீர்த்தம்: வஜ்ஜிர தீர்த்தம் பழமை: 1200 ஆண்டுகள் பாடியவர்: அருணகிரிநாதர்  (7)  தலமகிமை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் கூட்டு ரோட்டிலிருந்து 4 கிமீ தொலைவில் மிகவும் சிறப்பு வாய்ந்த வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடு போல் தனிச் சிறப்பு பெற்றது வல்லக்கோட்டை முருகன் கோவில். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் மூலவர் கிழக்கு நோக்கிய முருகன் சிலையும், உடன் வள்ளி தெய்வானை சிலைகளும் உள்ளன. எதிரே இரட்டை மயில்கள் உள்ளது சிறப்பு. தொலைவில் இருந்து பார்த்தாலும், முருகன் தெளிவாகத் தெரியும்படி உள்ளது. ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில...

கோவில் 417 - கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-417 நினைத்தாலே தடைகளை நீக்கியருளும் கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 30.7.2022 சனி அருள்மிகு பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் எம்சி.ஹள்ளி-577228 சிக்மகளூரு மாவட்டம் இருப்பிடம்: பத்ராவதியிலிருந்து 9 கிமீ மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி தெய்வானை தலமகிமை: சிக்கமகளூரு (சிவமொக்கா) மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்.சி.ஹள்ளி என்ற ஊரில் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பத்ராவதி நகர்/தரிகெரேவியில்ருந்து 9 கிமீ பயணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். பத்ரகிரி முருகன் கோவில் பத்ராவதி மற்றும் தரிகெரே தாலுகா பகுதிகளுக்கு இடையே உள்ளே எம்.சி.ஹள்ளியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சக்தி தேவதையாகவும், பத்ரகிரியின் காவல் தெய்வமாகவும் வனதுர்க்கை அம்மன் வீற்றிருக்கிறார். இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மகா தீபம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பவுர...

கோவில் 51 - புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-51 திருமண வரம் அருளும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில் 29.7.2021 வியாழன் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் சாரம் புதுச்சேரி-605013 இருப்பிடம்: புதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ மூலவர்: சுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வன்னி மரம் தலமகிமை: புதுவை மாநகர் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 2 கிமீ தொலைவில் சாரம் பகுதியில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. புதுச்சேரியின் காவல் தெய்வம் நாகமுத்து மாரியம்மன் வாழும் தலம். சுப்பிரமணியர் திருக்கோவிலில் சஷ்டி விழா மற்றும், சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். மாசி மகம் திருவிழாவில் புதுவை வரும் மயிலம் முருகனுக்கு, இத்தல முருகன் விருந்தோம்பல் செய்வது மிகவும் விசேஷமான அம்சம். பழமையான வன்னி மரத்தடியில் சனி பகவான் விளங்கும் அரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயம் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம். ஐப்பசி மாதத்தில் சஷ்டி விழா பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பி...

கோவில் 416 - அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-416 கலி போக்கும் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில் 29.7.2022 வெள்ளி அருள்மிகு மயிலேறி முருகன் திருக்கோவில் வேலாயுதம் நகர் அம்பாசமுத்திரம்-627401 திருநெல்வேலி மாவட்டம் இருப்பிடம்: அம்பாசமுத்திரத்திலிருந்து 3.4 கிமீ, திருநெல்வேலி 45 கிமீ மூலவர்: மயிலேறி முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆன்மீக பக்தர்களின் உடனடி நினைவிற்கு வருவது வேதபுரி என்னும் மன்னார்கோவில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி கோவிலும், சுயம்புலிங்கமாக அமைந்துள்ள இலந்தையடிநாதர் குடிகொண்டிருக்கும் பிரம்மதேசம் திருக்கைலாயநாதர் திருக்கோவிலும் ஆகும், இந்த சிவ, வைணவ தலங்களுக்கு அருகே உள்ள வேலாயுதமலை என்னும் குன்றில் குடிகொண்டிருக்கும் மயிலேறி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு நாலாம்கரம் பொத்தை என்ற பெயரும் உண்டு. 2 ஆண்டுகளுக்கு முன் 22.08.2020 விநாயகர் சதுர்த்தியன்று, முருகப்பெருமானுக்குரிய வேல் நிறுவப்பட்டது. வேலாயுத மலை மேல் அமைந்துள்ள சுனையில் எலுமிச்சை பழத்தைப் போட்டால் இயற்கைய...

கோவில் 50 - சென்னை கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-50 ஐஸ்வர்யம் பெருக அருளும் சென்னை கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில் 28.7.2021 புதன் அருள்மிகு கந்தக்கோட்டம் கந்தசுவாமி திருக்கோவில் கந்தக்கோட்டம் பார்க் டவுண் சென்னை-60003 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 850 மீ மூலவர்: கந்தசுவாமி உற்சவர்: முத்துக்குமாரர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: மகிழமரம் தல தீர்த்தம்: சரவணபொய்கை பழமை: 500-1000 வருடங்களுக்கு முன் பாடியவர்கள்: வள்ளலார், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம்  சுவாமிகள் தலமகிமை: சென்னை மாநகரில் சென்ட்ரல் ரயில் நிலையம்/பார்க் ரயில் நிலையம்/சென்னை மெட்ரோ/பாரி முனை பேருந்து நிலையம் அருகில் 5-10 நிமிட நடைபயணத்தில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும். பொதுவாக மூலவரின் பெயரிலேயே தேவஸ்தானம் அழைக்கப்படும். கந்தகோட்டத்தில் மூலவருக்கு நிகரான சக்தி உற்சவருக்கு { முத்துக்குமாரசுவாமி] இருப்பதால்  கந்தசுவாமி கோவிலென அழைக்கப்படும் இக்கோவிலுக்கு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு 1928 முதல் நடைபெறும் கந்தசஷ்டி கோடி அர்ச்சனை மி...

கோவில் 415 - தாராபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-415 அன்னாபிஷேகம் நடக்கும் அழகு முருகனின் தாராபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில் 28.7.2022 வியாழன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தாராபுரம்-638656 திருப்பூர் மாவட்டம் இருப்பிடம்: தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ மூலவர்: சுப்ரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்தலத்தில் மாசி மாதத்தில் மகா அன்னாபிஷேகம் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. பொதுவாக, அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனிக்குச் செய்வார்கள். ஆனால், இங்கே முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள். அந்த நாளில், ஊர்மக்கள் தங்கள் வீட்டில் இருந்து அரிசி, நெல், பருப்பு என ஏதேனும் தானியங்களை எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த அன்னாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல், முருகப்பெருமானுக்கு கனிகள் மற்றும் பட்சணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வதும் காணக் ...