கோவில் 1847 - கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1847

மங்கல வாழ்வு அருளும் கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

29.06.2026 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023268]

[அ/மி முருகன் திருக்கோவில்]

மேமாளூர் 605751

திருக்கோவிலூர் வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 39 கிமீ, ரிஷிவந்தியம் 13 கிமீ, திருக்கோவிலூர் 18 கிமீ, தியாகதுருகம் 22 கிமீ, உளுந்தூர்பேட்டை 37 கிமீ, திருவண்ணாமலை 45 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் மேமாளூர் கிராமத்தில் மங்கல வாழ்வு அருளும் கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.


கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினசரி சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

மிகவும் பழமையான கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் தற்போது இந்து அறநிலயத் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மங்கல வாழ்வு பெற, நல்ல எண்ணங்கள் உருவாக, சகல செல்வங்களும் கிடைக்க, வேண்டுவது நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் தீர, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, கவலைகள் மறைய, மன மகிழ்ச்சி உண்டாக, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நல்ல எண்ணங்களை உருவாக்கும் கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1847 மங்கல வாழ்வு அருளும் கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1847 நல்ல எண்ணங்களை உருவாக்கும் கள்ளக்குறிச்சி மேமாளூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்





Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்