கோவில் 1842 - கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1842
சகல செல்வங்களையும் அள்ளித் தரும் கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் கோவில்
24.06.2026 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM023166]
கோமாளூர் 605757
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 39 கிமீ, திருக்கோவிலூர் 19 கிமீ, தியாகதுருகம் 23 கிமீ, ரிஷிவந்தியம் 24 கிமீ, சங்கராபுரம் 29 கிமீ, திருவண்ணாமலை 41 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கோமாளூர் கிராமத்தில் சகல செல்வங்களையும் அள்ளித் தரும் கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை 41 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் கோமாளூர் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மூலவராக கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் திருக்கோவில் திருக்கோவிலூர் வட்டத்தில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகம் தற்போது இந்து அறநிலையத்துறை துறையினரால் நிர்வகிக்கப்படுகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. திருக்கோவில் வாயில் முன்பு வேல்கள் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், பிள்ளையார், அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சகல செல்வங்கள் வேண்டி, தோஷங்களை நீங்க, நினைத்தது நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் போக்க, திருமணத்தடை அகல, குழந்தைச் செல்வம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, தொழில் மேம்பட, மன அமைதி உண்டாக, பாவங்கள் விலக, நல்லன அருள
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தோஷங்களை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் திருவடிகள் வேண்டி கும்பிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1842 சகல செல்வங்களையும் அள்ளித் தரும் கள்ளக்குறிச்சி கோமாளூர் முருகன் கோவில்
Comments
Post a Comment