கோவில் 1829 - கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1829

மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

11.06.2026 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM047115]

[அ/மி பாலசுப்பிரமணியர் திருக்கோவில்]

தொட்டியம் 606201

சின்னசேலம் வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 15 கிமீ, சின்னசேலம் 7 கிமீ, தலைவாசல் 22 கிமீ, தியாகதுருகம் 26 கிமீ, சங்கராபுரம் 33 கிமீ, ரிஷிவந்தியம் 35 கிமீ, ஆத்தூர் 39 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தொட்டியம் கிராமத்தில் மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி அமைந்துள்ளது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது தலைவாசல் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

மிகவும் பழமையான கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலைய துறை நிர்வகித்து வருகின்றது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி அழகிய கோபுரங்கள், சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி கிடைக்க, செல்வம் பெருக, விருப்பங்கள் நிறைவேற, சந்தான பாக்கியம் வேண்டி, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, தொல்வினைகள் தீர, சகல பிணிகளும் நீங்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, பாவங்கள் விலக, நல்ல எண்ணங்கள் உண்டாக, வாழ்வில் ஏற்றம் பெற்றிட, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1829 மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1829 செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி தொட்டியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்