கோவில் 1788 - கேரளா திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1788
வினைகள் தீர்க்கும் கேரளா திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில்
1.05.2026 வெள்ளி
அருள்மிகு மச்சத் சண்முகானந்தா திருக்கோவில்
Wadakkanchery-Karumathra Road
கருமாத்ரா 680589 [Karumathra]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 20 கிமீ, ஷோரனூர் 18 கிமீ, குருவாயூர் 34 கிமீ, கொடுங்களூர் 58 கிமீ, கொச்சி விமான நிலையம் 63 கிமீ, பாலக்காடு 69 கிமீ
மூலவர்: சண்முகானந்தா
உற்சவர்: சண்முகானந்தா
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருமாத்ரா கிராமத்தில் மச்சத் பகுதியில் வினைகள் தீர்க்கும் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 69 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சண்முகானந்தா ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வருவது சிறப்பு நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்தை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் கொடிமரம். உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சண்முகானந்தா கையில் வேலுடன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வினைகள் தீர, கேட்ட வரங்கள் கிடைக்க, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட், அல்லல்கள் அகல, மங்கலம் பொங்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-9 மாலை 5-7
கேட்ட வரங்கள் தரும் திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா திருவடி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1788 வினைகள் தீர்க்கும் கேரளா திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா
Comments
Post a Comment