கோவில் 1636 - மலேசியா பேராக் கிரீக் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1636
மன அமைதி தரும் மலேசியா பேராக் கிரீக் சுப்பிரமணியர் கோவில்
30.11.2025 ஞாயிறு
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
Jalan Parit
33300 கிரீக் [Gerik]
உலு பேராக் மாவட்டம் [Hulu Perak District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 326 கிமீ, கிரீக் [Gerik] 1 கிமீ, உலு பேராக் [Hulu Perak] 46 கிமீ, பெத்தோங்க், தாய்லாந்து [Betong, Thailand] 50 கிமீ, பினாங்கு [Penang] 115 கிமீ, ஈப்போ [Ipoh] 124 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தோற்றம்: 19-ம் நூற்றாண்டு
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் உலு பேராக் மாவட்டம் [Hulu Perak District] கிரீக் [Gerik] நகரில் மன அமைதி தரும் கிரீக் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலேசியா திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 326 கிமீ தொலைவு அல்லது கிரீக் [Gerik] பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது உலு பேராக் [Hulu Perak] பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு அல்லது தாய்லாந்து [Thailand] நாட்டில் உள்ள பெத்தோங்க் [Betong] பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 115 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 124 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கிரீக் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் உலு பேராக் மாவட்டம் கிரீக் சுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், மாசி மகம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் உலு பேராக் மாவட்டம் கிரீக் சுப்பிரமணியர் கோவில் 19-ம் நூற்றாண்டில் குடியேறிய தமிழர்களால் சிறிய கோவிலாகக் கட்டபட்டது. 1920-ல் மாவட்ட அதிகாரி கேப்டன் எச். பெர்கிலி தற்போதைய கோவில் நிலத்தை தானியமாக கொடுத்து உதவினார். பின்னர் வீ. இராமசாமி நாயக்கர் தலைமையில் பல நல்ல புரவலர்களின் பேருதவியால் சுப்பிரமணியர் கோவில் கட்டப்பட்டு பின்னர் வீ. இராமசாமி நாயுடு குழுவினரால் திருக்கோவில் நிலம் முறையாக பதிவு செய்யப்பட்டு, 23.04.1929-ல் முதல் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 11.2.1938 மற்றும் 1979-ம் ஆண்டிலும் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றன.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் உலு பேராக் மாவட்டம் கிரீக் சுப்பிரமணியர் கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன அமைதி பெற, நோய்கள் தீர, நினைத்தது நடக்க, வினைகள் விலக, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு உண்டாக, நல்லன வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, இடர்கள் யாவும் களைய, தொழில், வியாபாரம் மேம்பட, செல்வம் பெருக, கல்வி சிறக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 7-9
நோய்கள் தீர்க்கும் மலேசியா பேராக் கிரீக் சுப்பிரமணியர் திருவடிகள் போற்றித் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1636 மன அமைதி தரும் மலேசியா பேராக் கிரீக் சுப்பிரமணியர் கோவில்
Comments
Post a Comment