கோவில் 1633 - மலேசியா கெடா சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1633
இகபர சுகம் தந்தருளும் மலேசியா கெடா சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவில்
27.11.2025 வியாழன்
அருள்மிகு பினாங்கு முருகன் திருக்கோவில்
9, Taman Berjaya
08000 சுங்கை பெடானி [Sungai Petani]
கோலா மூடா மாவட்டம் [Kuala Muda District]
கெடா மாநிலம்/கடாரம் [Kedah]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 357 கிமீ, பினாங்கு [Penang] 39 கிமீ, கோலா மூடா [Kuala Muda] 49 கிமீ, கெடா [Kedah] 113 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன்
தல மகிமை:
மலேசியா நாட்டின் வட பகுதியில் கெடா [Malacca] மாநிலம் கோலா மூடா மாவட்டம் [Kuala Muda District] சுங்கை பெடானி [Sungai Petani] நகரம் 9, Taman Berjaya பகுதியில் இகபர சுகம் தந்தருளும் சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 357 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கோலா மூடா [Kuala Muda] பேருந்து நிலையத்திலிருந்து 49 கிமீ தொலைவு அல்லது கெடா [Kedah] பேருந்து நிலையத்திலிருந்து 113 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
மலேசியா கெடா மாநிலம் கோலா மூடா மாவட்டம் சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் வருடந்தோறும் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வருட பிறப்பு, இந்து பண்டிகை தினங்கள், சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா கெடா மாநிலம் கோலா மூடா மாவட்டம் சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவில் மிகவும் சிறப்பு மிக்கக் கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா கெடா மாநிலம் சுங்கை பெடானி பினாங்கு முருகன் கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் புதிய பொலிவுடன் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், உற்சவர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகம் தந்தருள, வினைகள் தீர, வேண்டுவன கிடைத்திட, பிணிகள் போக்க, மன அமைதி கிட்ட, திருமணப்பேறு பெற்றிட, குழந்தை வரம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, செல்வம் பெருக, துன்பங்கள் விலக, நல்லன நடைபெற, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் தீர்த்தருளும் மலேசியா கெடா சுங்கை பெடானி பினாங்கு முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1633 இகபர சுகம் தந்தருளும் மலேசியா கெடா சுங்கை பெடானி பினாங்கு முருகன்
Comments
Post a Comment