கோவில் 1607 - மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1607
ஆனந்தமருளும் மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியர் கோவில்
01.11.2025 சனி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
137, Jalan Sekolah
Kampung Sepakat
மாசாய் [Masai 81750]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 339 கிமீ, பாசிர் கூடாங் [Pasir Gudang] 4 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 21 கிமீ, தம்போய் 28 கிமீ, பெர்லிங் 29 கிமீ, ஸ்கூடாய் 31 கிமீ, மூவார் [Muar] 180 கிமீ, மலாக்கா [Malacca] 224 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் மாசாய் [Masai] நகரில் ஆனந்தமருளும் மாசாய் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 339 கிமீ தொலைவு அல்லது பாசிர் கூடாங் [Pasir Gudang] பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 180 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 224 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மாசாய் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா மாசாய் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா 12 விமரிசையாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றது. தைப்பூசத் திருநாளன்று (9-ம் நாள்) பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுப்பிரமணிய வேண்டி நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் ந்டைபெறுகின்றன். தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகின்றது. 10-ம் நாள் சுவாமி தேரோட்டம் (ரதோற்சவம்)வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. 11-ம் நாள் பொன்னூஞ்சல் நடைபெறும். 12-ம் நாள் இடும்பன் பூஜையுடன் நடைபெற்று தைப்பூசத் திருவிழா இனிதே முடிகின்றது. மேலும் கந்த சஷ்டி பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தை மாதம் நடைபெறும் அருணகிரிநாதர் விழா இக்கோவிலில் நடைபெறுவது கூடுதல் சிறப்பு.
தல வரலாறு:
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மாசாய் சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்கக் கோவிலாக திகழ்கின்றது.
தல அமைப்பு:
மலேசியா ஜோகூர் பாரு பண்டார் டத்தோ ஒன் சுப்பிரமணியர் கோவில் கட்டிட புதிய பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருப்பதை போல அழகிய கொடிமரம் கருவறைக்கு எதிரில் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. வேல் பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆத்மலிங்கம், நடராஜர், கருமாரியம்மன், நாகராஜன், நாகம்மாள், இடும்பன், கால பைரவர், மனைவிகளுடன் நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவாரத் தெய்வங்களும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, மாசி மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி, அருணகிரிநாதர் பூஜை
பிரார்த்தனை:
ஆனந்தமருள, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வேண்டிய வரம் கிடைக்க, வல்வினைகள் போக்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன வேண்டி, சங்கடங்கள் தீர, மன மகிழ்ச்சி வேண்டி, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 7-9
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியரை பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1607 ஆனந்தமருளும் மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியர்
Comments
Post a Comment