கோவில் 1604 - மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1604

தடைகளை நீக்கியருளும் மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவில்

29.10.2025 புதன்


அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்

No-16, ஜாலான் கோவில் [Jalan Kuil]

வாடி ஹனா [Wadi Hana]

ஜோகூர் பாரு [Johor Bahru] 80300

ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 330 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 3 கிமீ, தம்போய் 12 கிமீ, பெர்லிங் 15 கிமீ, ஸ்கூடாய் 18 கிமீ, மூவார் [Muar] 170 கிமீ, மலாக்கா [Malacca] 215 கிமீ


மூலவர்: தண்டாயுதபாணி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை மற்றும் தண்டாயுதபாணி


தல மகிமை:

மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் ஜோகூர் பாரு [Johor Bahru] நகரில் ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 330 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது தம்போய் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பெர்லிங் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது ஸ்கூடாய் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது மூவார் பேருந்து நிலையத்திலிருந்து 170 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 215 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் வீற்றிருந்து அருள்கின்றார்.


மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மிகவும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வேல்முருகனை வழிபட்டு வேண்டிய வரங்கள் பெற்று செல்கின்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகின்றது. கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுகின்றது. தினசரி சிறப்புப் பூஜைகள், 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம், 7-ம் திருக்கல்யாணம் என கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களின் பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

மலேசியாவின் ஜோகூர் பாரு நகரத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோவில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் சிறந்த இந்து கோவில்களில் ஒன்றாகும் . 194- களில் ஜோகூர் பாருவில் தமிழ் குடியேறிகளும் தோட்டத் தொழிலாளர்களும் எளிய சடங்குகளுடன் தண்டாயுதபாணியை வழிபடத் தொடங்கினர். பல தசாப்தங்களாக, அந்த சமூகத்தினர் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விரிவாக்கப்பட்ட கோவிலை நிறுவினர். திராவிட கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக ஆற்றலுக்கு பெயர் பெற்ற திருக்கோவில் இது, தைப்பூசம், கந்த சஷ்டி திருவிழாக்களின் போது மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபடும் கோவிலாக திகழ்கின்றது.


தல அமைப்பு:

மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி கோவில் புதிய கோவில் அழகிய சிற்பங்கள், கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி வலது திருக்கரத்தில் தண்டம் ஏந்தியும், இடது திருக்கரத்தை இடுப்பில் ஒயிலாக இடுப்பில் வைத்தப்படியும் நின்ற திருக்கோலத்தில் பொலிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. வேல் பூஜை விசேஷம். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா எல்லா பரிவார மூர்த்திகளும் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, மாசி மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி, அஷ்டமி பூஜை, ஆடி வெள்ளி


பிரார்த்தனை:

தடைகள் நீங்க, நன்மைகள் அருள, மன தைரியம் கிடைக்க, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் அகல, பிணிகள் தீர, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க, தொழில் மேம்பட, நோய்கள் குணமாக, சத்ரு தொல்லைகள் அழிய, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5-9


நன்மைகளை அருளும் மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1604 தடைகளை நீக்கியருளும் மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி


படம் 2 - 1604 நன்மைகளை அருளும் மலேசியா ஜோகூர் பாரு தண்டாயுதபாணி




Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்