கோவில் 1576 - கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1576
ஆனந்த வாழ்வு தந்தருளும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில்
01.10.2025 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
ஆண்டிவரம் 642120
கிணத்துக்கடவு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 36 கிமீ, கிணத்துக்கடவு 13 கிமீ, பொள்ளாச்சி 23 கிமீ, பொள்ளாச்சி 32 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் ஆண்டிவரம் கிராமத்தில் ஆனந்த வாழ்வு தந்தருளும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிவரம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிவரம் முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிவரம் முருகன் கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியக் கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிவரம் முருகன் கோவிலில். மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஆனந்த வாழ்வு தந்தருள, எண்ணியது ஈடேற, நல்லன நடைபெற, விவசாயம் செழிக்க, வியாபாரம் விருத்தியடைய, வினைகள் நீங்க, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, தொல்லைகள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணியதை ஈடேற்றும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் திருப்பாதங்கள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1576 ஆனந்த வாழ்வு தந்தருளும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன்
Comments
Post a Comment