கோவில் 1575 - கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                           

தினம் ஒரு முருகன் ஆலயம்-1575

இகபர சுகமருளும் கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில்

30.09.2025 செவ்வாய்


அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM011169] 

வேடசந்தூர் 642007 

ஆனைமலை வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 57 கிமீ, ஆனைமலை 9 கிமீ, பொள்ளாச்சி 21 கிமீ, உக்கடம் 54 கிமீ 


மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: தண்டாயுதபாணி சுவாமி 


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவில் ஆனைமலை வட்டம் வேடசந்தூர் கிராமத்தில் இகபர சுகமருளும் கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் ஆனைமலை பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 54 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மூலவராக அருள்கின்றார். 


கோயம்புத்தூர் மாவட்டம் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.  


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும், தற்போது இந்து அறநிலையத் துறை இத்திருக்கோவிலை நிர்வகித்து வருகின்றது.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகம் விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி மூலவராக கையில் தண்டத்துடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், சக்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா: 

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

இகபர சுகம் பெற்றிட, வேண்டிய வரம் கிடைக்க, இருவினைகள் தீர, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, கல்வி, ஞானம் சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, சஞ்சலங்கள் போக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டிய வரம் தந்தருளும் கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1575 இகபர சுகமருளும் கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில்



படம் 2 - 1575 வேண்டிய வரம் தந்தருளும் கோயம்புத்தூர் வேடசந்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்