கோவில் 1573 - தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1573
சகல நோய்களையும் தீர்த்தருளும் தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவில்
28.09.2025 ஞாயிறு
அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோவில்
மங்களபுரம்
ரமணி நகர்
தஞ்சாவூர் 613007
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 3 கிமீ, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் 4 கிமீ, தஞ்சாவூர் ரயில் நிலையம் 4 கிமீ
மூலவர்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
கும்பாபிஷேகம்: 12.06.2024
தல மகிமை:
தஞ்சாவூர் மாநகரம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் நோய்கள் தீர்த்தருளும் தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. மேலும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் மூலவராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்திருக்கோவிலின் திருப்பணிகள மேற்கொள்ளப்பட்டு 12.06.2024-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆறு நாட்களும் சுவாமிக்கும், தேவியருக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து கந்த சஷ்டி பெருவிழாவில் கலந்து கொள்கின்றனர். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்னர் முருக பக்த ஜன சபா அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் நகரில் மங்களபுரம் பகுதியில் முருகப்பெருமான் கோவிலை கட்டி, நிர்வகித்து வருகின்றனர். மங்களபுரம் முருகப்பெருமான் கோவிலில் அறக்கட்டளையின் மேற்பார்வையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12.06.2024 அன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நோய்கள் தீர, மாங்கல்ய பாக்கியம் கிட்ட, விருப்பங்கள் நிறைவேற, வல்வினைகள் அகல, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நல்லன அருள, சஞ்சலங்கள் அகன்றிட, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மாங்கல்ய பாக்கியம் தந்தருளும் தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான் திருவடிகள் பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 1573 சகல நோய்களையும் தீர்த்தருளும் தஞ்சாவூர் மங்களபுரம் முருகப்பெருமான்
Comments
Post a Comment