கோவில் 1571 - கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1571

கேட்ட வரமருளும் கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில்

26.09.2025 வெள்ளி


அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM011661]

காட்டம்பட்டி 642202

கிணத்துக்கடவு வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 39 கிமீ, கிணத்துக்கடவு 17 கிமீ, பொள்ளாச்சி 25 கிமீ, உக்கடம் 36 கிமீ


மூலவர்: பழனியாண்டவர்

உற்சவர்: பழனியாண்டவர்

கும்பாபிஷேகம்: 04.12.2023


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் காட்டம்பட்டி கிராமத்தில் கேட்ட வரமருளும் கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவிலை அடையலாம். மூலவராக பழனியாண்டவர் இத்திருக்கோவிலில் கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 04.12.2023-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


கோயம்புத்தூர் மாவட்டம் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் காவடி ஏந்தி வருதல் சிறப்பம்சமாகும். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 04.12.2023 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. கோவில் வாயிலில் கொங்கு நாட்டின் திருத்தலத்திற்கே உரிய அழகிய ஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவிலில் மூலவராக கருவறையில் பழனியாண்டவர் வீற்றிருந்து வலது கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கேட்ட வரமருள, கவலைகள் தீர, வினைகள் விலக, பிணிகள் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல் நலன் சீராக, நல்லன அருள, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கவலைகள் யாவும் தீர்க்கும் கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1571 கேட்ட வரமருளும் கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவர்


படம் 2 - 1571 கவலைகள் யாவும் தீர்க்கும் கோயம்புத்தூர் காட்டம்பட்டி பழனியாண்டவர் கோவில் பக்தர்கள் காவடி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்