கோவில் 1570 - கோயம்புத்தூர் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1570
வேண்டும் வரம் தரும் கோயம்புத்தூர் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவில்
25.09.2025 வியாழன்
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
குன்னத்தூர் 641107
அன்னூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 21 கிமீ, அன்னூர் 13 கிமீ, மேட்டுப்பாளையம் 26 கிமீ, அவிநாசி 28 கிமீ
மூலவர்: பழனி ஆண்டவர்
உற்சவர்: பழனி ஆண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் அன்னூர் வட்டம் குன்னத்தூர் கிராமத்தில் வேண்டும் வரம் தரும் கோயம்புத்தூர் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். மேலும் இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 23.08.2024 அன்று கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மிக முக்கிய திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவிலில் திருப்பணி காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு 23.08.2024 அன்று கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவில் ஆகம முறைப்படி அழகிய வடிவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் வலது கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டும் வரம் கிடைக்க, கல்வி மேன்மை பெற, வினைகள் நீங்க, பிணிகள் அகல, குழந்தைப்பேறு கிட்ட, நோய்கள் குணமாக, நல்லன வேண்டி, எதிரிகள் தொல்லைகள் அகல, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கல்வி மேன்மை தரும் கோயம்புத்தூர் குன்னத்தூர் பழனி ஆண்டவரை மனக்கண்ணால் வேண்டி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1570 வேண்டும் வரம் தரும் கோயம்புத்தூர் குன்னத்தூர் பழனி ஆண்டவர்
Comments
Post a Comment