கோவில் 1569 - கோயம்புத்தூர் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1569
செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில்
24.09.2025 புதன்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் [TM010677]
முருகன் கோவில் தெரு
செட்டிக்காபாளையம் 642120
கிணத்துக்கடவு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 38 கிமீ, கிணத்துக்கடவு 12 கிமீ, பொள்ளாச்சி 21 கிமீ, உக்கடம் 34 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: தண்டாயுதபாணி
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் செட்டிக்காபாளையம் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார். செட்டிக்காபாளையம் பழனி ஆண்டவர் கோவில் [முருகன் கோவில் எண் 1568] செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவிலுக்கருகில் [1569] இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் முக்கிய திருவிழாக்களாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி வலது கையில் தண்டம் ஏந்தி ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக அருள, பிணிகள் போக்க, வேண்டுவது பெற்றிட, வினைகள் விலக, குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, சஞ்சலங்கள் தீர, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்
காலை 7-12 மாலை 4-8
பிணிகள் அனைத்தும் போக்கியருளும் கோயம்புத்தூர் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி திருவடிகள் பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1569 செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோவில்
Comments
Post a Comment