கோவில் 1545 - கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1545
இகபர சுகமருளும் கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகன் கோவில்
31.08.2025 ஞாயிறு
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
[அ/மி மாரியம்மன், பாலமுருகன் திருக்கோவில்]
பீளமேடு புதூர்
கோயம்புத்தூர் 641004
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 5 கிமீ, மசகாலிபாளையம் 500 மீ, சித்தாபுதூர் 4 கிமீ, பீளமேடு 4 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 7 கிமீ, சிங்காநல்லூர் 8 கிமீ, உக்கடம் 9 கிமீ, போத்தனூர் 13 கிமீ
மூலவர்: பாலமுருகன்
மூலவர் 2: மாரியம்மன் (ஆற்றல் மிக்கவள்)
உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
பழமை: 100 ஆண்டுகளுக்கும் முன்னதாக
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் பீளமேடு புதூரில் இகபர சுகமருளும் கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மசகாலிபாளையத்திருந்து 500 மீ தொலைவு அல்லது சித்தாபுதூரிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது பீளமேடு பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது பீளமேடு புதூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக பாலமுருகன் அருளாட்சி புரிகின்றார்.
கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகன் கோவிலில் மற்றொரு மூலவராக மாரியம்மன் ஆற்றலுடன் அருள்வதால் இத்திருக்கோவில் கோயம்புத்தூர் பீளமேடு புதூர் மாரியம்மன், பாலமுருகன் திருக்கோவில் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கோவில் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் பீளமேடு புதூர் மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் மற்ற முருகப்பெருமான் கோவில்களை போலவே தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி (சூரசம்ஹாரம்), வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப்பெருமானுக்குரிய திருநாட்களில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சப்பரத்தில் திருவீதி உலா வருதல் சிறப்பம்சம். ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
மேலும் நவராத்திரி, ஆடி வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி, அமாவாசை, தமிழ் புத்தாண்டு தினங்களில் மாரியம்மனுக்கு. பூச்சாட்டு மற்றும் சிற்ப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பீளமேடு புதூர் மாரியம்மன், பாலமுருகன் கோவில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, பிரசித்திப் பெற்ற கோவிலாக இப்பகுதியில் கருதப்படுகிறது.
.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவில் அழகிய கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் அழகான கொடிக்கம்பம் மற்றும் தீபஸ்தம்பத்தையும் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் ஆற்றல் மிக்க மாரியப்பன், விநாயகர், சிவபெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து இத்திருக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, நல்லன நடைபெற, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் அகல, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டு, உடல் ஆரோக்கியம் உண்டாக, பாவங்கள் களைய, எதிரிகள் தொல்லை மறைய, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன நடைபெறும் கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1545 இகபர சுகமருளும் கோயம்புத்தூர் பீளமேடு புதூர் பாலமுருகன்
Comments
Post a Comment