கோவில் 1544 - கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1544
சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவில்
30.08.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
பேரூர் செட்டிபாளையம்
கோயம்புத்தூர் 641010
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 13 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 3 கிமீ, உக்கடம் 9 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 10 கிமீ, போத்தனூர் 12 கிமீ, சிங்காநல்லூர் 17 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் பேரூர் செட்டிபாளையம் பகுதியில் சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மிகவும் சிறப்புப் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 17 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவிலை அடையலாம். முருகப்பெருமான் இத்திருக்கோவிலில் மூலவராக கையில் வேலேந்தி அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் விமரிசையாகக் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் கோவில் அழகிய கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி சிறிய மூர்த்தமாக நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், அம்பாள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, கேட்டது கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, எதிரிகள் தொல்லை அகல, நல்லன அருள, மன ஒற்றுமை பெற, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டதை தந்தருளும் கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன் திருவடி பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1544 சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் பேரூர் செட்டிபாளையம் முருகன்
Comments
Post a Comment