கோவில் 1543 - கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1543
செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில்
29.08.2025 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
சுண்டக்காமுத்தூர்
கோயம்புத்தூர் 641010
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 11 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 3 கிமீ, உக்கடம் 7 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 8 கிமீ, போத்தனூர் 10 கிமீ, சிங்காநல்லூர் 14 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கும் சுண்டக்காமுத்தூரில் செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் உலகப் புகழ் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். 2020-ம் இத்திருக்கோவிலில் 2020-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. இக்கோவிலில் இருந்து பல்லாண்டு காலமாக பழனிக்கு தைப்பூச சமயத்தில் காவடி எடுத்து செல்வது இன்றும் வழக்கமாகும். பங்குனி உத்திரம் திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 6 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை போன்ற முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில் சுமார் 100 வருட பழமையான கோவிலாகும். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக இத்திருக்கோவில் கட்டப்பட்ட்து என்பது சிறப்பம்சமாகும்.
.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலேந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தப்படியும் அழகு பாலகனாக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிகம்பம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக அருள, தடைகள் நீங்க, கல்யாண வரம் வேண்டி, குழந்தை வரம் கிட்ட, வினைகள் அகல, பிணிகள் தீர, விருப்பங்கள், நல்லன நடைபெற, உடல் ஆரோக்கியம் கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தடைகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் புகழ் போற்றிப் பாடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment