கோவில் 1542 - கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1542
வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்கும் கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவில்
28.08.2025 வியாழன்
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோவில்
குறிஞ்சி நகர்
பேரூர்
கோயம்புத்தூர் 641010
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 11 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 2 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 9 கிமீ, உக்கடம் 9 கிமீ, போத்தனூர் 13 கிமீ, சிங்காநல்லூர் 13 கிமீ
மூலவர்: வெற்றிவேல் முருகன்
உற்சவர்: வெற்றிவேல் முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கும் பேரூர் திருத்தலத்தின் அருகில் இருக்கும் குறிஞ்சி நகரில் வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்கும் கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் உலகப் புகழ் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வெற்றிவேல் முருகன் பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். 2018-ம் வாக்கில் இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவிலில் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவில் சுற்று வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற கோவிலாகும். இத்திருக்கோவிலுக்கு 2018-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன் கோவில் அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் வெற்றிவேல் முருகன் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் பொலிவுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத வெற்றிவேல் முருகன், லக்ஷ்மி நாராயணர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்க, பிணிகள் நீங்க, வினைகள் அகல, கல்வியில் சிறந்து விளங்க, வாழ்வில் வெற்றி பெற, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் தீர, நல்லன நடைபெற, மன அமைதி கிட்ட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பிணிகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகனை மனமுருக வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1542 வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்கும் கோயம்புத்தூர் பேரூர் குறிஞ்சி நகர் வெற்றிவேல் முருகன்
Comments
Post a Comment