கோவில் 1541 - கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1541
நாடி வருவோருக்கு நல்லது அருளும் கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவில்
27.08.2025 புதன்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
பேரூர்
கோயம்புத்தூர் 641010
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 10 கிமீ, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் 4 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 7 கிமீ, உக்கடம் 7 கிமீ, போத்தனூர் 10 கிமீ, சிங்காநல்லூர் 14 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் பேரூர் திருத்தலத்தில் நாடி வருவோருக்கு நல்லது அருளும் கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் உலகப் புகழ் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் பாலமுருகன் பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும்..
கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. காவடி திருவிழா இக்கோவிலின் முக்கிய நிகழ்வாகும். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவில் இப்பகுதியில் மிகப் பழமையான, திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் கோவில் அழகிய கோபுர அமைப்புகளுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் பாலமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், சிவபெருமான், சப்த மாதர்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நாடி வருவோருக்கு நல்லது அருள, கல்வி, ஞானம் மேம்பட, வேண்டுவன கிடைக்க, வினைகள் தீர, பிணிகள் பாக்க, குழந்தைப்பேறு உண்டாக, திருமணம் நடைபெற, ஐஸ்வர்யங்கள் பெருக, உடல் ஆரோக்கியம் வேண்டி, மன மகிழ்ச்சி கிட்ட, இடர்கள் களைய, தொழில், வியாபாரம் சிறக்க, வியாபாரம் செழிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கல்வி, ஞானம் மேம்பட அருளும் கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன் திருவடிகளை பணிந்து போற்றுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1541 நாடி வருவோருக்கு நல்லது அருளும் கோயம்புத்தூர் பேரூர் பாலமுருகன்
Comments
Post a Comment