கோவில் 1540 - கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1540
கவலைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
26.08.2025 செவ்வாய்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மணிமேகலை தெரு
சேவியர் தெரு
டவுன் ஹால்
கோயம்புத்தூர் 641001
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 4 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 1 கிமீ, உக்கடம் 1 கிமீ, போத்தனூர் 7 கிமீ, சிங்காநல்லூர் 8 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் டவுன் ஹால் மணிமேகலை தெருவில் கவலைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். மூலவராக பாலசுப்பிரமணிய சுவாமி இக்கோவிலில் அழகு பாலகனாக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் 2024-ல் சிறப்பாக நடைபெற்றது.
கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளன்று பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பல்வகை அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வேண்டும் வரங்களை பெற்று செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் உள்ள மிகப் பழமையான, பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும். இத்திருக்கோவிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பட்டு 2024-ல் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி சிறப்பாக அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் அழகான பாலகனாக மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி வலது திருக்கரத்தில் வேலுடன் நின்ற நிலையில் வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமியின் இடது திருக்கரம் இடுப்பில் ஒயிலாக வைத்தப்படி திருக்காட்சி அருள்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் பாலசுப்பிரமணிய சுவாமி உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கவலைகள் தீர, மன மகிழ்ச்சி பெற, வேண்டும் வரம் கிட்ட, வினைகள் விலக, பிணிகள் போக்க குழந்தை பாக்கியம் வேண்டி, திருமணம் நடைபெற வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன அருள, வாழ்வில் ஆனந்தம் அடைய, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, வியாபாரம், தொழில் மேம்பட, கல்வி, ஞானம் சிறக்க, செல்வம் பெருக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5.30-8.30
மன மகிழ்ச்சி தரும் கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1540 கவலைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் டவுன் ஹால் மணிமேகலை தெரு பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment