கோவில் 1539 - கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1539

ஆனந்தத்தை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவில்

25.08.2025 திங்கள்


அருள்மிகு சிவபால சிவபால முருகன் திருக்கோவில்

சுகுணாபுரம்

கோயம்புத்தூர் 641008

கோயம்புத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: காந்திபுரம் 12 கிமீ, போத்தனூர் 7 கிமீ, உக்கடம் 8 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 9 கிமீ மதுக்கரை 10 கிமீ, மலுமிச்சம்பட்டி 10 கிமீ, சிங்காநல்லூர் 15 கிமீ


மூலவர் : சிவபால முருகன்

உற்சவர் : சிவபால முருகன்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் சுகுணாபுரத்தில் ஆனந்தத்தை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் போத்தனூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது மதுக்கரையிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மலுமிச்சம்பட்டியிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 15 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவபால முருகன் கையில் வேலுடன் அம்சமாக அருள்பாலிக்கின்றார்.


கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றது. அதிக அளவில் சுற்று வட்டாரப் பகுதி பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து சிவபால முருகனை வழிபடுகின்றார். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவில் இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன் கோவில் கருவறையில் மூலவர் சிவபால முருகன் பொலிவான தோற்றத்துடன் திருக்காட்சியருளி ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளது. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான் அம்பாள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஆனந்தத்தை பெற, கேட்டதை தந்தருள, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, உடல் ஆரோக்கியம் கிட்ட, மன அமைதி உண்டாக, நல்லன அருள, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கேட்டதை தந்தருளம் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகனை மனமருகி தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 = 1539 ஆனந்தத்தை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன்


படம் 2 - 1539 கேட்டதை தந்தருளம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சுகுணாபுரம் சிவபால முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்