கோவில் 1538 - கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1538
வினைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவில்
24.08.2025 ஞாயிறு
அருள்மிகு விநாயகர் முருகன் திருக்கோவில்
மரப்பாலத் தோட்டம்
மதுக்கரை
கோயம்புத்தூர் 641105
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 18 கிமீ, மதுக்கரை 4 கிமீ, மலுமிச்சம்பட்டி 9 கிமீ, உக்கடம் 14 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 15 கிமீ, போத்தனூர் 15 கிமீ, சிங்காநல்லூர் 21 கிமீ
மூலவர் 1: முருகன்
மூலவர் 2: விநாயகர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் மதுக்கரை மரப்பாலத் தோட்டத்தில் வினைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுக்கரையிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது மலுமிச்சம்பட்டியிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது போத்தனூரிலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 21 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகன் மற்றும் விநாயகர் இரண்டு பேரும் மூலவர்களாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றனர்.
கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் தேரோட்டம் இத்திருக்கோவிலில் அதி முக்கிய நிகழ்வாகும். மேலும் விநாயகர் சதுர்த்தி இக்கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த இரு திருவிழாக்களுக்கும் ஏராளமான பக்தர்கள் இதிருக்கோவிலுக்கு வந்து மூலவர்களை வழிபடுகின்றனர். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி நன்னாட்களிலும் சிற்ப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் கோவில் கருவறையில் முருகன் மற்றும் விநாயகர் இருவரும் ஒரே சந்நிதியில் மூலவர்களாக ஒரு சேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இது மிகவும் சிறப்பம்சமாகும்.
திருவிழா:
தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
வினைகள் தீர, நல்லன அருள, வேண்டுவன கிடைக்க, பிணிகள் விலக, திருமணம், குழந்தை வரம் வேண்டி, தொழில் சிறக்க, நோய்கள் குணமாக, தடைகள் நீங்க, மன அமைதி கிட்ட, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன அருளும் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர் முருகன் திருவடிகள் பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1538 வினைகள் தீர்க்கும் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலத் தோட்டம் விநாயகர், முருகன்
Comments
Post a Comment