கோவில் 1513 - கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1513

வினைகள் தீர்க்கும் கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில்

30.07.2025 புதன்


அருள்மிகு விலங்கர சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

Elamadu Ambalammukku-Nellikunnam Road

விலங்கர 691531 [Vilangara]

கொல்லம் மாவட்டம் [Kollam District]

கேரளா மாநிலம் [Kerala]

இருப்பிடம்: கொல்லம் 26 கிமீ, கொட்டரகரா 7 கிமீ, புனலுர் 25 கிமீ, கருநாகப்பள்ளி 38 கிமீ, திருவனந்தபுரம் 63 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 26 கிமீ தொலைவில் இருக்கும் விலங்கர கிராமத்தில் அழகிய வினைகள் தீர்க்கும் கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கொட்டரகராவிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது புனலுரிலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளியிலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 63 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.


கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் [தைப்பூயம்] திருவிழா 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தங்கள் வேண்டுதலகளை நிறைவேற்ற பக்தர்கள் பல்வேறு காவடி ஏந்தி வருகின்றனர். திருக்கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றி சுப்பிரமணிய சுவாமியை வழிபட ஏராளாமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவது சிறப்பம்சமாகும். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையானதகக் கருதப்படுகிறது. இக்கோவில் கேரள பாணியில் பெரிய கோவிலாகக் கட்டப்பட்டள்ளது.

தல அமைப்பு:

கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அழகிய கோபுரங்கள், கண்ணைக் கவரும் சிற்பங்கள் மற்றும் அழகிய கொடிமரம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வினைகள் தீர, நல்லன அருள, கேட்டது கிடைத்திட, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு உண்டாக, குடுமப் ஒற்றுமை ஓங்க, நல்ல எண்ணங்கள் உருவாக, தொல்லைகள் அகல, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நல்லன அருளும் கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1513 வினைகள் தீர்க்கும் கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில்



படம் 2 - 1513 நல்லன அருளும் கேரளா கொல்லம் விலங்கர சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசம் காவடிகள்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்