கோவில் 1512 - கேரளா கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1512
நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் கேரளா கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.07.2025 செவ்வாய்
அருள்மிகு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வெள்ளநாதுருத்து சாலை [Vellanathuruthu Road]
அலப்பாடு 690573 [Alappad]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: கொல்லம் 31 கிமீ, கருநாகப்பள்ளி 6 கிமீ, காயம்குளம் 21 கிமீ, மாவெலிக்கரா 27 கிமீ, அடூர் 36 கிமீ, திருவனந்தபுரம் 91 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 31 கிமீ தொலைவில் இருக்கும் அலப்பாடு கிராமத்தில் அழகிய வெள்ளநாதுருத்து கடற்கரை அருகே நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பஸ்மது/பஸ்மம் என்றால் விபூதி/திருநீறு ஆகும். மேலும் கருநாகப்பள்ளியிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது காயம்குளத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது மாவெலிக்கராவிலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது அடூரிலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 91 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கருணை பொங்க அருள்புரிகின்றார்.
கேரளா கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் திருவிழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. இச்சமயத்தில் நடைபெறும் காவடித் திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரபலமான நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழாவும் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், தைப்பூசம் [தைப்பூயம்], வைகாசி விசாகம் என முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பாணியில் பெரிய கோவிலாகக் கட்டப்பட்டள்ளது.
தல அமைப்பு:
கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அழகிய கோபுரங்கள், நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் நெடிய கொடிமரம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், ஐயப்பன், சிவபெருமான், பெருமாள் நாகாஜா உள்ளிட்ட எல்லா பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, பிணிகள் நீங்க, விருப்பங்கள் நீறைவேற, வினைகள் விலக, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன அமைதி கிட்ட, தொல்லைகள் அகல, சகல தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பிணிகள் நீங்க அருளும் கேரளா கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமியை பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1512 நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் கேரளா கொல்லம் அலப்பாடு வெள்ளநாதுருத்து சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment