கோவில் 1511 - கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1511

இடர்கள் களையும் கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.07.2025 திங்கள்


அருள்மிகு பஸ்மது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வெங்கரா [Vengara]

தொடியூர் 690523 [Thodiyoor]

கொல்லம் மாவட்டம் [Kollam District]

கேரளா மாநிலம் [Kerala]

இருப்பிடம்: கொல்லம் 34 கிமீ, கருநாகப்பள்ளி 7 கிமீ, காயம்குளம் 19 கிமீ, அடூர் 24 கிமீ, மாவெலிக்கரா 26 கிமீ, திருவனந்தபுரம் 96 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 34 கிமீ தொலைவில் இருக்கும் தொடியூர் கிராமத்தில் வெங்கரா பகுதியில் இடர்கள் களையும் கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பஸ்மது/பஸ்மம் என்றால் விபூதி/திருநீறு ஆகும். மேலும் கருநாகப்பள்ளியிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது காயம்குளத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது அடூரிலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது மாவெலிக்கராவிலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 96 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் கண்ணம்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். சுப்பிரமணிய சுவாமி இத்திருக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் [தைப்பூயம்] முக்கியத் திருவிழாவாக காவ்டி, சிறப்புப் பூஜைகள் என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

பஸ்மது/பஸ்மம் என்றால் விபூதி/திருநீறு ஆகும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தொடியூர் கிராமத்தில் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பாணியில் கட்டப்பட்ட அழகிய கோவிலாகும்.

தல அமைப்பு:

கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அழகிய கொடிமரம் மற்றும் சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், ஐயப்பன், நாகர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

இடர்கள் களைய, மன மகிழ்ச்சி பெற, நினைத்தது நடைபெற, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் நலன் வேண்டி, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5.30-10 மாலை 5.30-9


மன மகிழ்ச்சி தந்தருளும் கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி திருவடிகளை பணிந்து வேண்டிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1511 இடர்கள் களையும் கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1511 மன மகிழ்ச்சி தந்தருளும் கேரளா கொல்லம் தொடியூர் பஸ்மது சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்