கோவில் 1509 - கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1509

நல்லன அருளும் கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவில்

26.07.2025 சனி


அருள்மிகு கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் திருக்கோவில்

நெடுங்கோளம் 691334 [Nedungolam]

[நெடுங்கோலம்/ நெடுன்கோளம்]

கொல்லம் மாவட்டம் [Kollam District]

கேரளா மாநிலம் [Kerala]

இருப்பிடம்: கொல்லம் 17 கிமீ, பரவூர் 5 கிமீ, சாத்தன்னூர் 7 கிமீ, திருவனந்தபுரம் 52 கிமீ


மூலவர்: சுப்பிரமணியன்


தல மகிமை:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் நெடுங்கோளம் நகரில் உள்ள ஒரு குன்றில் (கோட்டேக்குன்னு/Kottekunnu என்றால் குன்று/மலை) நல்லன அருளும் கொல்லம் நெடுங்கோளம் கொட்டக்குன்னு சுப்பிரமணியன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பரவூரிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சாத்தன்னூரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியன் அருளாட்சி புரிகின்றார்.


கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவிலில் தைப்பூசத் திருவிழா [தைப்பூயம்] ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் பாரம்பரிய காவடியாட்டம் நடனம் இடம்பெறுகிறது. இந்த விழாவின் போது அருகிலுள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சுமார் 5000 காவடிகள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்களால் சுமந்து செல்லப்பட்டு இக்கோவிலுக்கு கொண்டு வரப்படுகின்றன. பஸ்ம அபிஷேகம் (திருநீறு), பஞ்சாமிருதம் அபிஷேகம், பால் அபிஷேகம் உள்ளிட்ட பல முக்கியப் பிரசாதங்களை இந்த ஆலயம் வழங்குகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுங்கோளம் நகரில் கோட்டேக்குன்னு முருகா கோயில் அறக்கட்டளையால் சுப்பிரமணியன் கோவில் நிர்வகிக்கப்படுகின்றது. இத்திருக்கோவில் கொல்லம் பரவூர் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.

தல அமைப்பு:

கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவில் பொலிவான அமைப்புடன் அமைந்துள்ளது. கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியன் கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவர், ஐயப்பன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, எண்ணியது ஈடேற, வல்வினைகள் விலக, பிணிகள் நீங்க, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, சஞ்சலங்கள் தீர, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியது ஈடேற அருளும் கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியனை போற்றி வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1509 நல்லன அருளும் கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவில்



படம் 2 - 1509 எண்ணியது ஈடேற அருளும் கேரளா கொல்லம் நெடுங்கோளம் கோட்டேக்குன்னு சுப்பிரமணியன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் தூக்குக் காவடி வேண்டுதல்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்