கோவில் 1508 - கேரளா கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1508
விருப்பங்களை நிறைவேற்றும் கேரளா கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
25.07.2025 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பட்டதானம் 691021 [Pattathanam]
கொல்லம் மாவட்டம் [Kollam District]
கேரளா மாநிலம் {Kerala]
இருப்பிடம்: கொல்லம் 4 கிமீ, மய்யநாடு 8 கிமீ, பரவூர் 14 கிமீ, கருநாகப்பள்ளி 27 கிமீ, திருவனந்தபுரம் 63 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் பட்டதானம் பகுதியில் விருப்பங்களை நிறைவேற்றும் கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் மய்யநாட்டிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பரவூரிலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளியிலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது கேரள தலைநகரம் திருவனந்தபுரத்திலிருந்து 63 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கேரளா கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் [தைப்பூயம்] வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது, இத்திருநாளில் பக்தர்களின் தங்கள் வேண்டுதல்களுக்காக சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி (குறிப்பாக தூக்கு காவடி) ஏந்தி வருவது சிறப்பு நிகழ்வாகும். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரில் பட்டதானம் பகுதியில் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பேருதவியுடன் கேரளப் பாணியில். சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டள்ளது.
தல அமைப்பு:
கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோபுரங்கள் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. கோவிலில் கொடிமரம் உள்ளது. திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவர், ஐயப்பன், நாகர்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
விருப்பங்களை நிறைவேற, நோய்கள் குணமடைய, பிணிகள் நீங்க, குழந்தை செல்வம் வேண்டி, நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, மன அமைதி கிட்ட, தொல்லைகள் தீர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சகல நோய்களும் குணமடைய அருளும் கேரளா கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமியை பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ சித்தாந்தச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1508 விருப்பங்களை நிறைவேற்றும் கேரளா கொல்லம் பட்டதானம் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment