கோவில் 1484 - சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1484
மன மகிழ்ச்சி தரும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில்
1.07.2025 செவ்வாய்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
7-வது அவின்யு
பானு நகர்
அம்பத்தூர்
சென்னை 600053
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 21 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 38 கிமீ, பெரம்பூர் 11 கிமீ, கோயம்பேடு 13 கிமீ, ஸ்ரீபெரும்புதூர் 17 கிமீ, பூந்தமல்லி 19 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள அம்பத்தூர் பானு நகர் 7-வது அவின்யுவில் மன மகிழ்ச்சி தரும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி பெருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இக்கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் ஐப்பசி அன்னாபிஷேகம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
சென்னை அம்பத்தூர் வாழ் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்கள் உதவியுடன் அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு:
சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில் அழகிய அமைப்புடன் உள்ளது. இக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர்கள் சிவபெருமான், அம்பாள், ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி கிடைக்க, வேண்டுதல்கள் நிறைவேற, வல்வினைகள் தீர, பிணிகள் அகல, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்பம் சிறக்க, நோய்கள் குணமாக, நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, வியாபாரம், தொழில் விருத்தியடைய, தொல்லைகள் விலக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 6-8
வேண்டுதல்களை நிறைவேற்றும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகனை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1484 மன மகிழ்ச்சி தரும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன்
படம் 2 - 1484 வேண்டுதல்களை நிறைவேற்றும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன்
Comments
Post a Comment