கோவில் 1481 - சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1481
அல்லல்கள் அகற்றும் சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.06.2025 சனி
அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வடக்கு செங்குன்றம் சாலை (North Red Hills Road)
வில்லிவாக்கம்
சென்னை 600049
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 11 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 38 கிமீ, பெரம்பூர் 5 கிமீ, கோயம்பேடு 8 கிமீ, சென்னை எழும்பூர் 10 கிமீ, தி. நகர் 12 கிமீ
மூலவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
ஊற்சவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள வில்லிவாக்கத்தில் அல்லல்கள் அகற்றும் சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக திருமண கோலத்தில் திருக்காட்சி தந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவிலுக்கு அருகில் புகழ் பெற்ற அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் சௌமிய தாமோதர பெருமாள் கோவிலும் உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பர். முதல் ஆறு தினங்களும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் சிறப்பாக நடக்கின்றன. 6-ம் நாள் மை சூர சம்ஹார நிகழ்வு நடைபெறும். 7-ம் நாள் கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருமண வைபோகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கட்டிட அமைப்புகளுடன் எழுப்பப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
திருக்கோவிலுக்கு செல்ல சற்று மேலே ஏற வேண்டும். சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய சிற்பங்கள் உள்ளன. திருக்கோவில் கருவறையில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா துர்க்கை, சிவபெருமான், பார்வதி தேவி, நடராஜர், பெருமாள், ஆஞ்சநேயர், அம்மன், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
அல்லல்கள் அகல, மாங்கல்ய வரம் பெற, தீவினைகள் தீர, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, விருப்பங்கள் நிறைவேற, உடல் ஆரோக்கியம் உண்டாக, தொழில் சிறக்க, மன மகிழ்ச்சி கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மாங்கல்ய வரம் தரும் சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1481 அல்லல்கள் அகற்றும் சென்னை வில்லிவாக்கம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment