கோவில் 1479 - சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1479
செல்வம் பெருக அருளும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவில்
26.06.202 வியாழன்
அருள்மிகு சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
சுப்பராயன் தெரு
அமைந்தகரை
[அமிஞ்சிகரை/Aminjikarai]
சென்னை 600030
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 5 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 36 கிமீ, சென்னை எழும்பூர் 4 கிமீ, கோயம்பேடு 5 கிமீ, தி. நகர் 5 கிமீ, பெரம்பூர் 10 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்தகரை பகுதியில் செல்வம் பெருக அருளும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவசுப்பிரமணிய வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் காஞ்சிபுரம் திருநகர் போல ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் வரதராஜர் கோவில் இருப்பது சிறப்பம்சமாகும்.
சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் வருடந்தோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர் கோவில் ராஜகோபுரம் அழகிய அமைப்பைக் கொண்டுள்ளது. கோவிலினுள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், உற்சவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆஞ்சநேயர், கருமாரி அம்மன், நாகதேவதை, நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, வேண்டியது தர, இரு வினைகள் தீர, பிணிகள் அகல, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்பம் சிறக்க, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, நல்லன அருள, சஞ்சலங்கள் தீர, மன நிம்மதி கிடைக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 5-8
வேண்டியதை தரும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியரை பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1479 செல்வம் பெருக அருளும் சென்னை அமைந்தகரை சிவசுப்பிரமணியர்
Comments
Post a Comment