கோவில் 1451 - நாமக்கல் கூட்டப்பள்ளி முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1451
செல்வம் பெருக அருளும் நாமக்கல் கூட்டப்பள்ளி முருகன் கோவில்
29.05.2025 வியாழன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
கூட்டப்பள்ளி காலனி
கூட்டப்பள்ளி 637214
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 33 கிமீ, திருச்செங்கோடு 3.5 கிமீ, பள்ளிபாளையம் 12 கிமீ, சங்ககிரி 15 கிமீ, ஈரோடு 18 கிமீ, குமாரபாளையம் 21 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவில் இருக்கும் கூட்டப்பள்ளி கிராமத்தில் செல்வம் பெருக அருளும் கூட்டப்பள்ளி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி அருள்பாலிக்கின்றார்.
நாமக்கல் கூட்டப்பள்ளி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளி முருகன் கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான கோவிலாகும்.
தல அமைப்பு:
நாமக்கல் மாவட்டம் கூட்டப்பள்ளி முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவருக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, சஞ்சலங்கள் தீர, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, வேண்டியது நிறைவேற, மன மகிழ்ச்சி கிட்ட, நல்லன அருள
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,
சஞ்சலங்கள் தீர்க்கும் நாமக்கல் கூட்டப்பள்ளி முருகனை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1451 செல்வம் பெருக அருளும் நாமக்கல் கூட்டப்பள்ளி முருகன்
Comments
Post a Comment