கோவில் 1449 - நாமக்கல் பள்ளிகாடு முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1449
கவலைகள் தீர்த்தருளும் நாமக்கல் பள்ளிகாடு முருகன் கோவில்
27.05.2025 செவ்வாய்
அருள்மிகு பன்னக்காடு முருகன் திருக்கோவில்
பள்ளிகாடு 637211
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 55 கிமீ, திருச்செங்கோடு 19 கிமீ, குமாரபாளையம் 3 கிமீ, பள்ளிபாளையம் 10 கிமீ, சங்ககிரி 16 கிமீ, ஈரோடு 15 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவில் இருக்கும் பள்ளிகாடு கிராமத்தில் கவலைகள் தீர்த்தருளும் பள்ளிகாடு முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிகாடு முருகன் கோவிலை அடையலாம். மூலவர் முருகன் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து ஆற்றலுடன் அருள்புரிகின்றார்.
நாமக்கல் பள்ளிகாடு முருகன் கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் முக்கிய திருவிழாவாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் குமாரபாளையம் நகர் அருகில் அமைந்துள்ளது பள்ளிகாடு முருகன். இக்கோவில் கும்பாபிஷேகம் 2024-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
நாமக்கல் மாவட்டம் பள்ளிகாடு முருகன் கோவில் கருவறையில் முருகன் கையில் வேல் கொண்டு, இடது கரம் இடுப்பில் வைத்து நின்ற திருக்கோலத்தில் கருணை பொங்க திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவருக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், நாகர்கள் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கவலைகள் தீர, மன அமைதி பெற, வினைகள் அகல, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன மகிழ்ச்சி கிடைக்க, தொழில் சிறக்க, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தந்தருளும் நாமக்கல் திருச்செங்கோடு பள்ளிகாடு முருகனை வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1449 கவலைகள் தீர்த்தருளும் நாமக்கல் பள்ளிகாடு முருகன்
படம் 2 - 1449 மன அமைதி தந்தருளும் நாமக்கல் திருச்செங்கோடு பள்ளிகாடு முருகன்
Comments
Post a Comment