கோவில் 1419 - நாமக்கல் கரட்டுபாளையம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1419
கல்வி, ஞானம் சிறக்க அருளும் நாமக்கல் கரட்டுபாளையம் முருகன் கோவில்
27.04.2025 ஞாயிறு
அருள்மிகு முருகன் திருக்கோவில்
கரட்டுப்பாளையம்
இலுப்பிலி 637202
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 17 கிமீ, இலுப்பிலி 3 கிமீ, திருச்செங்கோடு 18 கிமீ, ராசிபுரம் 28 கிமீ, சங்ககிரி 30 கிமீ, ஈரோடு 40 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் இலுப்பிலி கிராமத்தின் அருகில் இருக்கும் கரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்வி, ஞானம் சிறக்க அருளும் கரட்டுபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இலுப்பிலி பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கரட்டுபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார்.
நாமக்கல் மாவட்டம் கரட்டுபாளையம் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் கரட்டுபாளையம் முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
நாமக்கல் கரட்டுபாளையம் முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் தண்டம் ஏந்தி பழனி முருகனை போல ஆற்றலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், நாகர்கள், உற்சவர், துர்க்கை, உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கல்வி, ஞானம் சிறக்க, நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, நினைத்தது நிறைவேற, வினைகள் அகல, பிணிகள் நீங்க, மழலை செல்வம் வேண்டி, செல்வம் பெருக, நல்லன நடைபெற, சிக்கல்கள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க அருளும் நாமக்கல் கரட்டுபாளையம் முருகன் திருவடிகளை தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻

Comments
Post a Comment