கோவில் 1422 - சேலம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1422
வாழ்வில் முன்னேற்றம் தரும் சேலம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவில்
30.04.2025 புதன்
அருள்மிகு செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோவில்
மருளையம்பாளையம் 637501
[மருலியம்பாளையம்]
சேலம் தெற்கு வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் 23 கிமீ, வீரபாண்டி 7 கிமீ, மகுடஞ்சாவடி 10 கிமீ, ராசிபுரம் 21 கிமீ, சங்ககிரி 25 கிமீ, எடப்பாடி 26 கிமீ, நாமக்கல் 42 கிமீ
மூலவர்: செல்வ முத்துக்குமார சுவாமி
உற்சவர்: செல்வ முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவில் இருக்கும் மருளையம்பாளையம் கிராமத்தில் [மருலியம்பாளையம்] வாழ்வில் முன்னேற்றம் தரும் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் வீரபாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது மகுடஞ்சாவடி பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் சேலம் தெற்கு வட்டம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி மூலவராக அருள்பாலிக்கின்றார்.
சேலம் மாவட்டம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் முக்கிய திருவிழாக்களாக சிறப்பு தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா என சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சேலம் மாவட்டம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் செங்குந்தர் சமூகத்தினரால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
சேலம் மாவட்டம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி கோவில். கருவறையில் மூலவர் செல்வ முத்துக்குமார சுவாமி அழகு பாலகனாக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் செல்வ முத்துக்குமார சுவாமி வலது திருக்கரத்தை அபய முத்திரை காண்பித்தும், இடது திருக்கரத்தை இடுப்பில் ஏந்தியும் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட முக்கிய தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் முன்னேற்றம் அடைய, நினைத்த காரியங்கள் வெற்றி பெற, வினைகள் விலக, செல்வம் பெருக, ஞானம் மேம்பட, திருமணம், குழந்தை வேண்டி, வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட, மன அமைதி கிடைக்க, உடல் ஆரோக்கியம் கிட்ட, நல்லன அருள, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்த காரியங்கள் வெற்றி பெற அருளும் சேலம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1422 வாழ்வில் முன்னேற்றம் தரும் சேலம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி
படம் 2 - 1422 நினைத்த காரியங்கள் வெற்றி பெற அருளும் சேலம் மருளையம்பாளையம் செல்வ முத்துக்குமார சுவாமி
Comments
Post a Comment