கோவில் 1421 - நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1421
எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
29.04.2025 செவ்வாய்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM005160]
எருமப்பட்டி 637013
[எருமைப்பட்டி]
சேந்தமங்கலம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 24 கிமீ, சேந்தமங்கலம் 18 கிமீ, மோகனூர் 24 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி
உற்சவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் எருமப்பட்டி கிராமம் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்கின்கின்றார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் ஆண்டு தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி தேரோட்டம் என மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பழமையான கோவிலாகும். தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் ராஜகோபுரம் முன் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
எண்ணிய எண்ணங்களை நிறைவேற, ஐஸ்வர்யங்கள் பெருக, வினைகள் தீர, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, சிக்கல்கள் தீர, நல்லன அருள, மன நிம்மதி கிடைக்க, தொஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-11 மாலை 5-7
ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1421 எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி
படம் 2 - 1421 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் நாமக்கல் எருமப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி
Comments
Post a Comment