கோ 1418 - நாமக்கல் இலுப்பிலி குமாரமலை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1418

இகபர சௌபாக்கியம் அருளும் நாமக்கல் இலுப்பிலி குமாரமலை முருகன் கோவில்

26.04.2025 சனி


அருள்மிகு குமாரமலை முருகன் திருக்கோவில்

இலுப்பிலி 637202

திருச்செங்கோடு வட்டம்

நாமக்கல் மாவட்டம்


இருப்பிடம்: நாமக்கல் 18 கிமீ, திருச்செங்கோடு 18 கிமீ, ராசிபுரம் 25 கிமீ, சங்ககிரி 30 கிமீ, ஈரோடு 40 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் இலுப்பிலி கிராமத்தில் உள்ள குமாரமலையில் இகபர சௌபாக்கியம் அருளும் இலுப்பிலி குமாரமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் இலுப்பிலி குமாரமலை முருகன் கோவிலை அடையலாம். இக்கோவில் மூலவராக முருகன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் சிறப்பு மிக்க இலுப்பிலி சீர்காழிநாதர் கோவில் அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் இலுப்பிலி குமாரமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் திருவிழா மிக முக்கிய திருவிழாவாக சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இலுப்பிலி குமாரமலை முருகன் கோவில் இப்பகுதியில் உள்ள சிறப்புப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

இலுப்பிலி குமாரமலை முருகன் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி அழகிய பாலகனாக கருணை பொங்க நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், பார்வதி, இடும்பன், அய்யனார் முதலான பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

இகபர சௌபாக்கியம் வேண்டி, வேண்டிய வரங்கள் நிறைவேற, வினைகள் நீங்க, பிணிகள் அகல, குழந்தைப்பேறு கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிடைக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் நாமக்கல் இலுப்பிலி குமாரமலை முருகனை மனமுருகி தொழுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1418 இகபர சௌபாக்கியம் அருளும் நாமக்கல் இலுப்பிலி குமாரமலை முருகன்


படம் 2 - 1418 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் நாமக்கல் இலுப்பிலி குமாரமலை முருகன்














Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்