கோவில் 1417 - நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1417
கல்வி, ஞானம் சிறக்க அருளும் நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவில்
25.04.2025 வெள்ளி
அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோவில்
KON தியேட்டர் சாலை
[CSM DNC Theatres]
குமாரபாளையம் 638183
குமாரபாளையம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 61 கிமீ, குமாரபாளையம் 1.5 கிமீ, பவானி 3 கிமீ, ஈரோடு 15 கிமீ, சங்ககிரி 22 கிமீ, திருச்செங்கோடு 29 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவில் இருக்கும் குமாரபாளையம் நகரில் உள்ள KON தியேட்டர் சாலையில் [தற்போது CSM DNC Theatres] கல்வி, ஞானம் சிறக்க அருளும் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது பவானி பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் வடபழனி முருகனை போல ஆற்றலுடன் அருளாட்சி செய்கின்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவில் குமாரபாளையம் நகரில் அமைந்துள்ள முக்கியமான முருகன் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் வடபழனி முருகன் போலவே கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் மூலவர் முருகப்பெருமான் வலது திருக்கரத்தை அபய முத்திரை அருளியும், இடது திருக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்தும் திருக்காட்சி அருள்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, சிவபெருமான், பார்வதி, இடும்பன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கல்வி, ஞானம் சிறக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, சந்தான பாக்கியம் வேண்டி, தொழில், வியாபாரம் மேம்பட, விவசாயம் செழிக்க, நல்லன நடைபெற, சஞ்சலங்கள் அகல, மனப்பயம் நீங்க, தீராத நோய்கள் தீர, கேட்டது கிடைத்திட, சகல தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1417 கல்வி, ஞானம் சிறக்க அருளும் நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகன்
படம் 2 - 1417 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நாமக்கல் குமாரபாளையம் வடபழனி முருகன்
Comments
Post a Comment