கோவில் 1362 - கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1362
நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
01.03.2025 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[அ/மி முருகன் திருக்கோவில்]
காந்தி நகர்
தெக்குப்பாளையம் 641020
[தெற்குப்பாளையம்]
கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: கோயம்புத்தூர் 14 கிமீ, துடியலூர் 7 கிமீ, காரமடை 14 கிமீ, மேட்டுப்பாளையம் 22 கிமீ, அன்னூர் 26 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள தெக்குப்பாளையம் பகுதியில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் துடியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது காரமடை பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டம் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக அருளாட்சி புரிகின்றார். பிரசித்திப் பெற்ற காரமடை ரங்கநாதர் கோவில் அருகில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகின்றது.
தல அமைப்பு:
தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலஸ்தானத்திற்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வல்வினைகள் அகல, பிணிகள் நீங்க, குழநதை பாக்கியம் கிடைக்க, குடும்ப ஒற்றுமை ஓங்கிட, விவசாயம் செழிக்க, நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வல்வினைகளை அகற்றும் கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1362 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1362 வல்வினைகளை அகற்றும் கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment