கோவில் 1360 - சேலம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1360
செல்வம் பெருக அருளும் சேலம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவில்
27.02.2025 வியாழன்
அருள்மிகு செந்தில் முருகன் திருக்கோவில்
கோனேரிப்பட்டி அக்ரஹாரம்
கோனேரிப்பட்டி 637107
சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 54 கிமீ, எடப்பாடி 10 கிமீ, குமாரபாளையம் 20 கிமீ, சங்ககிரி 25 கிமீ, தாரமங்கலம் 34 கிமீ, ஈரோடு 34 கிமீ
மூலவர்: செந்தில் முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தின் அருகில் இருக்கும் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் செல்வம் பெருக அருளும் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் செந்தில் முருகன் பொலிவுடன் தோற்றமளித்து அருள்புரிகின்றார்.
கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன,
தல வரலாறு:
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவில் பழமையான கோவிலாகும்.
தல அமைப்
கோனேரிப்பட்டி செந்தில் முருகன் கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் செந்தில் முருகன் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி பொலிவுடன் வீற்றிருந்து நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிப்பீடம் உள்ளன. மேலும் விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, சஞ்சலங்கள் தீர, நேர்மறை எண்ணங்கள் உருவாக, தீமைகள் அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, பிணிகள் அகல, மன மகிழ்ச்சி கிடைக்க, நினைத்தது நிறைவேற, நல்லன நடைபெற, வாழ்வில் ஏற்றம் ஏற்பட, வியாபாரம் மேம்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சஞ்சலங்கள் தீர்க்கும் சேலம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன் மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1360 செல்வம் பெருக அருளும் சேலம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன்
படம் 2 - 1360 சஞ்சலங்கள் தீர்க்கும் சேலம் கோனேரிப்பட்டி செந்தில் முருகன்
Comments
Post a Comment