கோவில் 1357 - சேலம் திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1357
நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் சேலம் திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் கோவில்
24.02.2025 திங்கள்
அருள்மிகு ஓம்கார மலை வேல்முருகன் திருக்கோவில்
ஓம்கார மலை
திண்டமங்கலம் 636455
ஓமலூர் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 19 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 22 கிமீ, ஓமலூர் 6 கிமீ, தாரமங்கலம் 11 கிமீ, மேச்சேரி 15 கிமீ, எடப்பாடி 33 கிமீ, மேட்டூர் 35 கிமீ, சங்ககிரி 40 கிமீ
மூலவர்: வேல்முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் இருக்கும் ஓம்கார மலையில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் சேலம் திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் கோவிலை அடையலாம்.
இத்திருக்கோவிலில் வேல்முருகன் மூலவராக வீற்றீருந்து அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 16.02.2025 அன்று நடைபெற்றது. இக்கோவில் அருலிலேயே உள்ள ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகமும் 16.02.205-ல் நடந்தேறியது.
திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாப்படுகின்றன.
தல வரலாறு:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்டமங்கலத்தில் உள்ள ஓம்கார மலை வேல்முருகன் கோவில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாக கருதப்படுகிறது. அண்மையில் திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்து 16.02.2025ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
திண்டமங்கலம் ஓம்கார மலையின் உச்சியில் உள்ள வேல்முருகன் கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வசதி உள்ளது. ஓம்கார மலைவேல்முருகன் திருக்கோவில் ராஜகோபுரம் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. கருவறையில் வேல்முருகன் மூலவராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரே மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அருகிலேயே தேவியருடன் ரங்கநாதர் தனிக் கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். ஆஞ்சநேயர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகளை உண்டாக, சங்கடங்கள் தீர, வினைகள் அகல, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை, ஓங்க,நோய்கள் நீங்க, மன மகிழ்ச்சி கிடைக்க, நல்லருள் வேண்டி, பாவங்கள் அகல, வாழ்வில் வெற்றி பெற, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருளும் சேலம் திண்டமங்கலம் ஓம்கார மலை வேல்முருகன் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment